Group 2 Previous Year Questions Topic Syllabus Wise - 2013
தமிழ் (Tamil)
உடம்பிடை தோன்றிற்றொன்றை அறுத்ததன் உதிரம் ஊற்றி அடல் உறச்சுட்டு வேறொர் மருந்தினால் துயரம் தீர்வர் இத்தொடரைக் கூறியவர்
Choices:
- a) இளங்கோவடிகள்
- b) சீத்தலை சாத்தனார்
- c) கம்பர்
- d) வால்மீகி
Show Answer / விடை
Answer: கம்பர்
Exam: Group 2 2013
'பிள்ளைத் தமிழ்' என்ற பெயரில் ஒரு தனிநூலினைச் செய்த முதல் ஆசிரியர் யார்?
Choices:
- a) ஒட்டக்கூத்தர்
- b) புகழேந்தி
- c) குமரகுருபரர்
- d) பகழிக்கூத்தர்
Show Answer / விடை
Answer: ஒட்டக்கூத்தர்
Exam: Group 2 2013
திருமங்கையாழ்வார் சொல்லணியில் அமைத்துப் பாடிய நூல் எது?
Choices:
- a) திருக்குறுந்தாண்டகம்
- b) திருவெழுக்கூற்றிருக்கை
- c) திருநெடுந்தாண்டகம்
- d) திருவந்தாதி
Show Answer / விடை
Answer: திருவெழுக்கூற்றிருக்கை
Exam: Group 2 2013
விடைத்தேர்க: வீரமா முனிவர் இயற்றியுள்ள ஐந்திலக்கணங்களைக் கூறும் இலக்கண நூல் எது?
Choices:
- a) முதுமொழி மாலை
- b) செந்தமிழ் இலக்கணம்
- c) கொடுந்தமிழ் இலக்கணம்
- d) தொன்னூல் விளக்கம்
Show Answer / விடை
Answer: தொன்னூல் விளக்கம்
Exam: Group 2 2013
“எறும்பும் தன்கையில் எண் சாண்” - எனப்பாடியவர்
Choices:
- a) கபிலர்
- b) ஒட்டக்கூத்தர்
- c) ஒளவையார்
- d) புகழேந்தி
Show Answer / விடை
Answer: ஒளவையார்
Exam: Group 2 2013
பாவை நூல்களில் காலத்தால் முற்பட்டதாகக் கருதப்படும் நூல் எது?
Choices:
- a) தைப்பாவை
- b) திருப்பாவை
- c) திருவெம்பாவை
- d) காவியப்பாவை
Show Answer / விடை
Answer: திருப்பாவை
Exam: Group 2 2013
காந்திமதியின் வருகைப்பருவத்துப் பாடலுக்காக வைரக்கடுக்கனைப் பரிசாகப் பெற்ற புலவர் யார்?
Choices:
- a) சிவஞான முனிவர்
- b) பலபட்டடைச் சொக்கநாதர்
- c) அழகிய சொக்க நாதர்
- d) மீனாட்சி சுந்தரம் பிள்ளை
Show Answer / விடை
Answer: அழகிய சொக்க நாதர்
Exam: Group 2 2013
சைவராக இருந்தும் சமண காப்பியமான சீவகசிந்தாமணிக்கு உரை எழுதியவர் யார்?
Choices:
- a) பேராசிரியர்
- b) அடியார்க்கு நல்லார்
- c) நச்சினார்க்கினியர்
- d) ந.மு.வேங்கடசாமி
Show Answer / விடை
Answer: நச்சினார்க்கினியர்
Exam: Group 2 2013
கீழ்க்காண்பவர்களுள் எவர் திருக்குறளுக்கு உரை எழுதவில்லை
Choices:
- a) நச்சர்
- b) திருமலையர்
- c) அடியார்க்கு நல்லார்
- d) தாமத்தர்
Show Answer / விடை
Answer: அடியார்க்கு நல்லார்
Exam: Group 2 2013
"ஆட்சிக்கும் அஞ்சாமல் யாவரேனும் ஆள்கவெனத் துஞ்சாமல், தனது நாட்டின் மீட்சிக்குப் பாடுபவன் கவிஞன் ஆவான்" -என்று பாடியவர் யார்?
Choices:
- a) பாரதிதாசன்
- b) கண்ணதாசன்
- c) முடியரசன்
- d) பாரதியார்
Show Answer / விடை
Answer: முடியரசன்
Exam: Group 2 2013
'கோவலன் பொட்டல்' என வழங்கப்படும் இடம்
Choices:
- a) கோவலன் பொட்டலம் விரித்து உணவு அருந்திய இடம்
- b) கோவலன் கொலைக்களப்பட்ட இடம்
- c) கோவலன் சிலம்பு விற்க வந்த இடம்
- d) கண்ணகி கோவலன் வாழ்ந்த இடம்
Show Answer / விடை
Answer: கோவலன் கொலைக்களப்பட்ட இடம்
Exam: Group 2 2013
பாரதிக்கு 'மகாகவி'-என்ற பட்டம் கொடுத்தவர் யார்?.
Choices:
- a) வ.ரா
- b) உ.வே.சா
- c) கி.ஆ.பெ.வி
- d) லா.ச.ரா
Show Answer / விடை
Answer: வ.ரா
Exam: Group 2 2013
பொருந்தா இணையைத் தேர்க: சொல் பொருள்
Choices:
- a) மா - அழகு
- b) மீ - உயர்ச்சி
- c) மூ - மூப்பு
- d) மை - மேம்பாடு
Show Answer / விடை
Answer: மை - மேம்பாடு
Exam: Group 2 2013
“ஏழையின் குடிசையில் அடுப்பும் விளக்கும் தவிர எல்லாமே எரிகின்றன” இக்கவிதை வரிகளைப் பாடியவர் யார்?
Choices:
- a) அறிஞர் அண்ணா
- b) வல்லிக்கண்ணன்
- c) பட்டுக்கோட்டையார்
- d) மீரா
Show Answer / விடை
Answer: வல்லிக்கண்ணன்
Exam: Group 2 2013
“வெப்பத் தடுகளத்து வேழங்க ளாயிரமும் கொப்பத் தொருகளிற்றால் கொண்டோன்” - இவ்வரிகள் யாரைக் குறிப்பிடுகிறது?
Choices:
- a) இராசேந்திரன்
- b) முதல் இராசராசன்
- c) இராசாதிராசன்
- d) இராசமகேந்திரன்
Show Answer / விடை
Answer: இராசேந்திரன்
Exam: Group 2 2013
"நகல்வல்லர் அல்லார்க்கு மாயிரு ஞாலம் பகலும்பாற் பட்டன் றிருள்" - இக்குறள் இடம்பெற்றுள்ள இயல் எது?
Choices:
- a) இல்லறவியல்
- b) துறவறவியல்
- c) ஊழியல்
- d) பாயிரவியல்
Show Answer / விடை
Answer: இல்லறவியல்
Exam: Group 2 2013
செய் - என்னும் வேர்ச் சொல்லின் வினையாலணையும் பெயரைத் தேர்ந்தெடு:
Choices:
- a) செய்தீர்
- b) செய்வாய்
- c) செய்தவன்
- d) செய்தான்
Show Answer / விடை
Answer: செய்தவன்
Exam: Group 2 2013
சொற்களை ஒழுங்குபடுத்திச் சரியான சொற்றொடர் எழுதுக:
Choices:
- a) “கல்லார்க்கும் கற்றார்க்கும் களிப்பருளும் களிப்பே”
- b) "கற்றார்க்கும் கல்லார்க்கும் களிப்பருளும் களிப்பே"
- c) "களிப்பே களிப்பருளும் கற்றார்க்கும் கல்லார்க்கும்"
- d) "களிப்பருளும் களிப்பே கற்றார்க்கும் கல்லார்க்கும்"
Show Answer / விடை
Answer: “கல்லார்க்கும் கற்றார்க்கும் களிப்பருளும் களிப்பே”
Exam: Group 2 2013
சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடராக்குதல்
Choices:
- a) திறப்பட வுரைப்பது குறத்திப் பாட்டே இறப்பு நிகழ்வெதிர் வென்னும் முக்காலமும்
- b) முக்காலமும் வுரைப்பது குறத்திப்பாட்டே இறப்பு நிகழ்வெதிர் திறப்பட வென்னும்
- c) இறப்பு நிகழ்வெதிர் வென்னும் முக்காலமும் திறப்பட வுரைப்பது குறத்திப் பாட்டே
- d) குறத்திப்பாட்டே முக்காலமும் வுரைப்பது இறப்பு நிகழ்வெதிர் வென்னும் திறப்பட
Show Answer / விடை
Answer: இறப்பு நிகழ்வெதிர் வென்னும் முக்காலமும் திறப்பட வுரைப்பது குறத்திப் பாட்டே
Exam: Group 2 2013
விடைக்கேற்ற வினாவைத் தேர்க: 'பெற்றதை வழங்கி வாழும் பெருங்குணம் பெறுதல் இன்பம்'
Choices:
- a) பெற்றதை வழங்கி வாழும் பெருங்குணத்தால் பெறுவது எது?
- b) பெற்றதை வழங்கி ஏன் வாழ வேண்டும்?
- c) பெருங்குணம் எப்போது வரும்?
- d) பெறுவது எது?
Show Answer / விடை
Answer: பெற்றதை வழங்கி வாழும் பெருங்குணத்தால் பெறுவது எது?
Exam: Group 2 2013
பொருந்தா இணையைக் கண்டறிக:
Choices:
- a) தினம் - நாள்
- b) நெருநல் - நேற்று
- c) சலவர் - நல்லவர்
- d) மாரன் - மன்மதன்
Show Answer / விடை
Answer: சலவர் - நல்லவர்
Exam: Group 2 2013
வேர்ச்சொல் தேர்க: பற்றுக பற்றற்றான் பற்றினை: அப்பற்றைப் பற்றுக பற்று விடற்கு
Choices:
- a) பற்றுக
- b) பற்றற்றான்
- c) பற்றி
- d) பற்று
Show Answer / விடை
Answer: பற்று
Exam: Group 2 2013
"நான்மணிமாலை" - என்ற சொற்றொடர் குறிப்பது
Choices:
- a) முத்து, வைரம், வைடூரியம், மாணிக்கம்
- b) முத்து, பவளம், மரகதம், மாணிக்கம்
- c) முத்து, மரகதம், கெம்பு, மாணிக்கம்
- d) முத்து, பவளம், வைரம், மாணிக்கம்
Show Answer / விடை
Answer: முத்து, பவளம், மரகதம், மாணிக்கம்
Exam: Group 2 2013
சீறாப்புராணத்தில் தீர்க்கதரிசனத்தைக் கூறுவது
Choices:
- a) நுபுவத்துக் காண்டம்
- b) விலாதத்துக் காண்டம்
- c) ஹிஜ்ரத்துக் காண்டம்
- d) மேற்கூறிய அனைத்தும்
Show Answer / விடை
Answer: நுபுவத்துக் காண்டம்
Exam: Group 2 2013
‘வள்ளைக்கு உறங்கும் வளநாட' வள்ளை - என்பதன் பொருள் யாது?
Choices:
- a) நெல் குத்தும் போது பெண்கள் பாடும் பாட்டு
- b) நடவு நடும் போது பெண்கள் பாடும் பாட்டு
- c) கும்மியடிக்கும் போது பெண்கள் பாடும் பாட்டு
- d) இவை எதுவும் இல்லை
Show Answer / விடை
Answer: நெல் குத்தும் போது பெண்கள் பாடும் பாட்டு
Exam: Group 2 2013
‘மானுடப் பிறப்பினுள் மாதா உதரத்து ஈனமில் கிருமி செருவினில் பிழைத்தும்' என்ற உயிரியியல் தொழில்நுட்பத்தை அறிவுறுத்தும் நூல்
Choices:
- a) தேவாரம்
- b) திருவாசகம்
- c) திருக்கோவையார்
- d) திருப்பள்ளியெழுச்சி
Show Answer / விடை
Answer: திருவாசகம்
Exam: Group 2 2013
“ஆர்பரவை அணிதிகழும் மணிமுறுவல் அரும்பரவை” - இப்பாடலடியில் அமைந்துள்ளவாறு பின்வருவனவற்றுள் எது தவறானது?
Choices:
- a) சீர்மோனை அமைந்துள்ளது
- b) சீர் முரண் அமைந்துள்ளது
- c) சீர் இயைபு அமைந்துள்ளது
- d) கீழ்க்கதுவாய்மோனை அமைந்துள்ளது
Show Answer / விடை
Answer: சீர் முரண் அமைந்துள்ளது
Exam: Group 2 2013
தனிவாக்கியம் குறித்து கீழ்க்கண்டவற்றுள் சரியானது எது?
Choices:
- a) வினாப் பொருள் தரும் வாக்கியம்
- b) ஓர் எழுவாய் அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட எழுவாய்கள் ஒரு பயனிலையைக் கொண்டு முடியும்
- c) தனி வாக்கியங்கள் பல தொடர்ந்து வரும்
- d) ஒரு முதன்மை வாக்கியம் ஒரு துணை வாக்கியத்துடன் சேர்ந்து வரும்
Show Answer / விடை
Answer: ஓர் எழுவாய் அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட எழுவாய்கள் ஒரு பயனிலையைக் கொண்டு முடியும்
Exam: Group 2 2013
"திருவள்ளுவர் தோன்றிராவிட்டால் தமிழன் என்னும் ஓர் இனம் இருப்பதாக உலகத்தார்க்குத் தெரிந்திருக்காது. திருக்குறள் என்னும் ஒரு நூல் தோன்றிராவிட்டால், தமிழ்மொழி என்னும் ஒரு மொழி இருப்பதாக உலகத்தார்க்குத் தெரிந்திருக்காது'' எனக் கூறியவர்
Choices:
- a) கி.வா.ஜ.
- b) கி.ஆ.பெ.வி.
- c) திரு.வி.க.
- d) உ.வே.சா
Show Answer / விடை
Answer: கி.ஆ.பெ.வி.
Exam: Group 2 2013
“தெண்டன் இட்டது வள்ளுகிர் திண்டிறல் புலியே” -இத்தொடரில் 'திண்டிறல்' என்னும் சொல்லிற்கு
Choices:
- a) கொடுமையான
- b) கடுமையான
- c) எடுப்பான
- d) உறுதியான
Show Answer / விடை
Answer: உறுதியான
Exam: Group 2 2013
துரைமாணிக்கம் என்ற இயற்பெயரைக் கொண்டவர்
Choices:
- a) மீரா
- b) முடியரசன்
- c) கண்ணதாசன்
- d) பெருஞ்சித்திரனார்
Show Answer / விடை
Answer: பெருஞ்சித்திரனார்
Exam: Group 2 2013
'ஏற்பாடு' என்பதன் பொருள்
Choices:
- a) சூரியன் உதிக்கும் நேரம்
- b) ஏற்றப்பாட்டுப்பாடுதல்
- c) சந்திரன் தோன்றும் நேரம்
- d) சூரியன் மறையும் நேரம்
Show Answer / விடை
Answer: சூரியன் மறையும் நேரம்
Exam: Group 2 2013
'க' - என்ற ஓரெழுத்து ஒரு மொழிக்கு தவறான பொருள் எது?
Choices:
- a) அரசன்
- b) காற்று
- c) மயில்
- d) காத்தல்
Show Answer / விடை
Answer: காத்தல்
Exam: Group 2 2013
‘சலவரைச் சாரா விடுதல் இனிதே' 'சலவர்' - என்றச் சொல்லின் ஆங்கிலச்சொல்
Choices:
- a) Sorrow full person
- b) Importer
- c) Violent person
- d) Deceit full person
Show Answer / விடை
Answer: Deceit full person
Exam: Group 2 2013
அகர வரிசைப்படி சொற்களைச் சீர் செய்க.
Choices:
- a) சீராட்டு தாலாட்டு நீராட்டு பாராட்டு
- b) தாலாட்டு சீராட்டு பாராட்டு நீராட்டு
- c) நீராட்டு பாராட்டு சீராட்டு தாலாட்டு
- d) பாராட்டு நீராட்டு தாலாட்டு சீராட்டு
Show Answer / விடை
Answer: சீராட்டு தாலாட்டு நீராட்டு பாராட்டு
Exam: Group 2 2013
செயப்பாட்டு வினைச்சொற்றொடரைக் கண்டறிக.
Choices:
- a) நாற்காலி தச்சனால் செய்யப்பட்டது
- b) தச்சன் நாற்காலியைச் செய்தான்
- c) நாற்காலியைச் செய்தவன் தச்சன்
- d) நாற்காலியைத் தச்சன் செய்தான்
Show Answer / விடை
Answer: நாற்காலி தச்சனால் செய்யப்பட்டது
Exam: Group 2 2013
கனி முன் நேர் வருவதும் கனி முன் நிரை வருவதும்
Choices:
- a) கலித்தளை
- b) வஞ்சித்தளை
- c) இயற்சீர் வெண்டளை
- d) வெண்சீர் வெண்டளை
Show Answer / விடை
Answer: வஞ்சித்தளை
Exam: Group 2 2013
பரிந்தோம்பிக் காக்க ஒழுக்கம் தெரிந்தோம்பி தேரினும் அஃதே துணை - கீழ்க்காணும் சொற்களுள் எதிர்ச்சொல்லைக் கண்டறிக :
Choices:
- a) பரிந்து × வெறுத்து
- b) பரிந்து × விரும்பி
- c) தெரிந்து × உணர்ந்து
- d) தெரிந்து X ஆராய்ந்து
Show Answer / விடை
Answer: பரிந்து × வெறுத்து
Exam: Group 2 2013
'மூதூர்' எத்திணைக்குரிய ஊர்?
Choices:
- a) மருதம்
- b) பாலை
- c) குறிஞ்சி
- d) நெய்தல்
Show Answer / விடை
Answer: மருதம்
Exam: Group 2 2013
பின்வருவனவற்றுள் 'ஈறு போதல்', 'இனமிகல்' என்னும் விதிகளின்படி புணராதது
Choices:
- a) நெடுங்கடல்
- b) செங்கடல்
- c) கருங்கடல்
- d) கருங்குயில்
Show Answer / விடை
Answer: செங்கடல்
Exam: Group 2 2013
பொருந்தாத இணையைக் கண்டறிக :
Choices:
- a) வீரமாமுனிவர் - பரமார்த்த குருகதை
- b) தேவநேயப்பாவாணர் - தமிழர் திருமணம்
- c) திரு.வி.க.- சைவத்திறவு
- d) பெருஞ்சித்திரனார் - தமிழ்ச்சோலை
Show Answer / விடை
Answer: பெருஞ்சித்திரனார் - தமிழ்ச்சோலை
Exam: Group 2 2013
பின்வருவனவற்றுள் பொருந்தும் இணையைத் தேர்ந்தெடு : செரு செறு
Choices:
- a) சண்டை வயல்
- b) போர் சிறிய
- c) போர்க்களம் குளம்
- d) கோபப்படு போரிடு
Show Answer / விடை
Answer: சண்டை வயல்
Exam: Group 2 2013
'அழுது அடியடைந்த அன்பர்' – என்னும் தொடர் யாரைக் குறிக்கிறது?
Choices:
- a) அருணகிரியார்
- b) சம்பந்தர்
- c) சுந்தரர்
- d) மாணிக்கவாசகர்
Show Answer / விடை
Answer: மாணிக்கவாசகர்
Exam: Group 2 2013
'என்றுமுள தென்தமிழ்' - என்னும் தொடரை இயம்பியவர் யார்?
Choices:
- a) கம்பர்
- b) பாரதியார்
- c) பாரதிதாசன்
- d) வள்ளலார்
Show Answer / விடை
Answer: கம்பர்
Exam: Group 2 2013
பதிதொறு புயல்பொழி தருமணி பணைத்ரு பருமணி பகராநெற் – இத்தொடரில் ‘புயல்' - என்னும் சொல்லிற்கு பொருள்
Choices:
- a) வானம்
- b) காற்று
- c) மேகம்
- d) நீர்
Show Answer / விடை
Answer: மேகம்
Exam: Group 2 2013
கீழ்க்காணும் விடைகளில் எது சரியானது?
Choices:
- a) சே-சோலை
- b) சோ - சிவப்பு
- c) கா – மதில்
- d) மா - விலங்கு
Show Answer / விடை
Answer: மா - விலங்கு
Exam: Group 2 2013
'ஷெல்லிதாசன்' என்று தன்னைக் கூறிக் கொண்டவர் யார்?
Choices:
- a) சுப்பிரமணிய பாரதியார்
- b) சுத்தானந்த பாரதியார்
- c) சோமசுந்தர பாரதியார்
- d) சுப்ரமணிய சிவா
Show Answer / விடை
Answer: சுப்பிரமணிய பாரதியார்
Exam: Group 2 2013
குண்டலகேசிக்கு எதிராக எழுந்த வாதநூல் எது?
Choices:
- a) சூளாமணி
- b) நாககுமார காவியம்
- c) யசோதர காவியம்
- d) நீலகேசி
Show Answer / விடை
Answer: நீலகேசி
Exam: Group 2 2013
விடைத்தேர்க: இலக்கியச் செய்திகளோடு அறிவியல் துறைப்பொருள்களையும் முதன் முதலாகச் சேர்த்து விளக்கம் தந்த நூல் எது?
Choices:
- a) அபிதான கோசம்
- b) அபிதான சிந்தாமணி
- c) விவேக சிந்தாமணி
- d) சீவக சிந்தாமணி
Show Answer / விடை
Answer: அபிதான சிந்தாமணி
Exam: Group 2 2013
"திலகர் விதைத்த விதை பாரதியாக முளைத்தது" - என்று கூறியவர் யார்?
Choices:
- a) காந்திஜி
- b) நேருஜி
- c) இராஜாஜி
- d) நேதாஜி
Show Answer / விடை
Answer: இராஜாஜி
Exam: Group 2 2013
"ஆயுள் நாள் முழுவதும் தமிழ்மகன் தன்னுடன் வைத்துக் கொண்டு அனுபவிக்கக் கூடிய வாடாத கற்பகப் பூச்செண்டு" - என்று கவிமணியின் பாடலைப் பாராட்டியவர் யார்?
Choices:
- a) வ.உ.சிதம்பரம்
- b) டி. கே.சிதம்பரம்
- c) சிதம்பர சுவாமி
- d) சிதம்பர நாதன்
Show Answer / விடை
Answer: டி. கே.சிதம்பரம்
Exam: Group 2 2013
திரு. வி. கல்யாணசுந்தரனாரின் பயண இலக்கிய நூல் எது?
Choices:
- a) யான் கண்ட இலங்கை
- b) எனது இலங்கைச் செலவு
- c) யான் கண்ட ஜப்பான்
- d) உலகம் சுற்றிய தமிழன்
Show Answer / விடை
Answer: எனது இலங்கைச் செலவு
Exam: Group 2 2013
“மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்" - எனப்பாடியவர்
Choices:
- a) அரிசில் கிழார்
- b) மோசிகீரனார்
- c) ஒளவையார்
- d) பரணர்
Show Answer / விடை
Answer: மோசிகீரனார்
Exam: Group 2 2013
சிவபெருமான் திருக்கோவிலின் எதிரே உள்ள அறுகால் பீடத்தில் இருந்து வடமொழி, தென்மொழிப் புலவர் போற்ற அரங்கேறிய நூல் எது?
Choices:
- a) பெரிய புராணம்
- b) திருவிளையாடற்புராணம்
- c) கந்தபுராணம்
- d) திருவாசகம்
Show Answer / விடை
Answer: திருவிளையாடற்புராணம்
Exam: Group 2 2013
பெரியபுராணத்தில் யாருடைய வரலாறு மிக விரிவாக விளக்கப்பட்டுள்ளது?
Choices:
- a) திருநாவுக்கரசர்
- b) திருஞானசம்பந்தர்
- c) சுந்தரர்
- d) காரைக்கால் அம்மையார்
Show Answer / விடை
Answer: திருஞானசம்பந்தர்
Exam: Group 2 2013
சுந்தரர் இறைவனால் ஆட்கொள்ளப்பட்ட இடம் எது?
Choices:
- a) திருச்செங்குன்றம்
- b) திருவெண்ணெய் நல்லூர்
- c) திருச்செந்தூர்
- d) திருவாரூர்
Show Answer / விடை
Answer: திருவெண்ணெய் நல்லூர்
Exam: Group 2 2013
எழுத்து என்னும் இதழில் புதுக்கவிதைகளைப் படைத்தவர்
Choices:
- a) மீரா
- b) இன்குலாப்
- c) தருமு சிவராமு
- d) ந.பிச்சமூர்த்தி
Show Answer / விடை
Answer: தருமு சிவராமு
Exam: Group 2 2013
மனிதர்களின் மாறுபட்ட மன விகாரத்தை எடுத்து உணர்த்தும் "ஈஸ்வரலீலை" என்னும் கதைநூலின் ஆசிரியர்
Choices:
- a) லாச. ராமாமிருதம்
- b) சி. சு. செல்லப்பா
- c) ந. பிச்சமூர்த்தி
- d) தி.ஜானகிராமன்
Show Answer / விடை
Answer: ந. பிச்சமூர்த்தி
Exam: Group 2 2013
முத்துக்குமார் சுவாமி பிள்ளைத் தமிழை இயற்றியவர்
Choices:
- a) குமர குருபரர்
- b) பலபட்டடைச் சொக்கநாதர்
- c) சேக்கிழார்
- d) சிவஞான சுவாமிகள்
Show Answer / விடை
Answer: குமர குருபரர்
Exam: Group 2 2013
இந்திய நூலகத் தந்தை எனப்போற்றப்படுகிறவர்
Choices:
- a) உ.வே. சாமிநாத அய்யர்
- b) மாயூரம் வேதநாயகம் பிள்ளை
- c) சீர்காழி சீ. இரா. அரங்கநாதன்
- d) தஞ்சைவாணன்
Show Answer / விடை
Answer: சீர்காழி சீ. இரா. அரங்கநாதன்
Exam: Group 2 2013
'தேம்பாவணி' நூலில் உள்ள படலங்களின் எண்ணிக்கை
Choices:
- a) 39 படலங்கள்
- b) 30 படலங்கள்
- c) 32 படலங்கள்
- d) 36 படலங்கள்
Show Answer / விடை
Answer: 36 படலங்கள்
Exam: Group 2 2013
பொருத்துக: புலவர் நூற்பெயர் (a) முடியரசன் 1. ஆனந்தத் தேன் (b) சச்சிதானந்தன் 2. மாங்கனி (c) குமரகுருபரர் 3. காவியப்பாவை (d) கண்ணதாசன் 4. சகலகலாவல்லிமாலை
Choices:
- a) 2 1 4 3
- b) 3 2 4 1
- c) 3 1 4 2
- d) 1 3 2 4
Show Answer / விடை
Answer: 3 1 4 2
Exam: Group 2 2013
மலரின் பருவத்தைக் குறிக்காத பெயர் எது?
Choices:
- a) அகரு
- b) அலர்
- c) முகை
- d) வீ
Show Answer / விடை
Answer: அகரு
Exam: Group 2 2013
'மருமக்கள் வழி மான்மியம்' என்ற நூலின் ஆசிரியர் யார்?
Choices:
- a) திரு.வி.க
- b) கவிமணி
- c) இரசிரமணி
- d) நாமக்கல் கவிஞர்
Show Answer / விடை
Answer: கவிமணி
Exam: Group 2 2013
‘கிளியை வளர்த்துப் பூனையின் கையில் கொடுத்தது போல' - என்னும் உவமை உணர்த்தும் பொருள் யாது?
Choices:
- a) இன்பம்
- b) வருமுன் காத்தல்
- c) மகிழ்ச்சி
- d) துன்பம்
Show Answer / விடை
Answer: துன்பம்
Exam: Group 2 2013
அகர வரிசைப்படி சொற்களைச் சீர் செய்க:
Choices:
- a) வைகுதல் வைகறை வைகலும் வைகல்
- b) வைகறை வைகுதல் வைகல் வைகலும்
- c) வைகலும் வைகல் வைகுதல் வைகறை
- d) வைகல் வைகலும் வைகறை வைகுதல்
Show Answer / விடை
Answer: வைகல் வைகலும் வைகறை வைகுதல்
Exam: Group 2 2013
வாக்கியங்களைக் கவனி: கூற்று (A) : எ.கா " நான் புத்தகம் கொண்டு வருகிறேன்' என்று பவானி, காயத்ரியிடம் கூறினாள் காரணம் (R): ஒருவர் கூறியதை அப்படியே கூறுவது மேற்கோள் குறியீடு இடம் பெறும் தன்மை, முன்னிலைப் பெயர்கள் இடம்பெறும் என்பது நேர்க்கூற்று ஆகும்
Choices:
- a) இவற்றுள் (A) மற்றும் (R) இரண்டும் சரி. மேலும் (R) என்பது (A)விற்கு சரியான விளக்கமல்ல
- b) இவற்றுள் (A) தவறு. ஆனால் (R) சரி
- c) இவற்றுள் (A) சரி. ஆனால் (R) தவறு
- d) இவற்றுள் (A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம்
Show Answer / விடை
Answer: இவற்றுள் (A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம்
Exam: Group 2 2013
இலக்கணக் குறிப்புச் சொல்லைத் தேர்க: 'பண்புப் பெயர்'
Choices:
- a) திட்பம்
- b) ஆட்டம்
- c) கோடல்
- d) பெறுதல்
Show Answer / விடை
Answer: திட்பம்
Exam: Group 2 2013
அகர வரிசைப்படி சொற்களைச் சீர் செய்க:
Choices:
- a) தோப்பு துப்பு தீர்ப்பு தப்பு
- b) துப்பு தோப்பு தப்பு தீர்ப்பு
- c) தப்பு தீர்ப்பு துப்பு தோப்பு
- d) தப்பு தீர்ப்பு தோப்பு துப்பு
Show Answer / விடை
Answer: தப்பு தீர்ப்பு துப்பு தோப்பு
Exam: Group 2 2013
பொருந்தா இணையைக் கண்டறிக:
Choices:
- a) சுவடி - நூல்
- b) வெய்யோன் - திங்கள்
- c) செட்டு - சிக்கனம்
- d) சிந்தை - உள்ளம்
Show Answer / விடை
Answer: வெய்யோன் - திங்கள்
Exam: Group 2 2013
சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடராக்குதல்
Choices:
- a) தமிழில் பேசுதல் தமிழறிந்தாரிடம் தமிழர் தகுதி மிகு பண்பாகும்
- b) தமிழறிந்தாரிடம் தமிழர் தகுதி மிகு பண்பாகும் தமிழில் பேசுதல்
- c) தகுதி மிகு பண்பாகும் தமிழில் பேசுதல் தமிழறிந்தாரிடம் தமிழர்
- d) தமிழர் தமிழறிந்தாரிடம் தமிழில் பேசுதல் தகுதிமிகு பண்பாகும்
Show Answer / விடை
Answer: தமிழர் தமிழறிந்தாரிடம் தமிழில் பேசுதல் தகுதிமிகு பண்பாகும்
Exam: Group 2 2013
'கற்றவனுக்குக் கட்டுச் சோறு வேண்டாம்' என்று குறிப்பிடும் இலக்கியம்
Choices:
- a) மூதுரை
- b) நாலடியார்
- c) பழமொழி நானூறு
- d) நான்மணிக்கடிகை
Show Answer / விடை
Answer: பழமொழி நானூறு
Exam: Group 2 2013
எவ்வகை வாக்கியம்? மாணவன் பாடம் படித்திலன்
Choices:
- a) எதிர்மறைத் தொடர்
- b) பொருள் மாறா எதிர்மறைத் தொடர்
- c) உடன்பாட்டுத் தொடர்
- d) கலவைத் தொடர்
Show Answer / விடை
Answer: எதிர்மறைத் தொடர்
Exam: Group 2 2013
தக்கார் தகவுஇலர் என்பது அவர் அவர் எச்சத்தால் காணப்படும் - இக்குறளில் அமைந்துள்ள தக்கார்- எச்சத்தால் என்ற இணை
Choices:
- a) அடி முரண்
- b) அடி மோனை
- c) அடி இயைபு
- d) இன எதுகை
Show Answer / விடை
Answer: அடி இயைபு
Exam: Group 2 2013
விடைக்கேற்ற வினாவைத் தேர்க: 'மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள் சொல்வதிலோர் மகிமை இல்லை'
Choices:
- a) தமிழர்க்குப் பெருமை தராதது எது?
- b) நமக்குள்ளே பேசுவது எது?
- c) பழங்கதைகளால் என்ன நன்மை?
- d) பழங்கதைகளின் மகிமை யாது?
Show Answer / விடை
Answer: தமிழர்க்குப் பெருமை தராதது எது?
Exam: Group 2 2013
விடைக்கேற்ற வினாவைத் தேர்க: 'இரட்டைக்கிளவி இரட்டிற் பிரிந்திசையா'
Choices:
- a) இரட்டைக்கிளவி இரட்டித்தால் என்னவாகும்?
- b) இரட்டைக்கிளவி எவ்விடத்தில் வரும்?
- c) இரட்டிற் பிரிந்திசையாதது எது?
- d) இரட்டிற் பிரிந்திசைப்பது எது?
Show Answer / விடை
Answer: இரட்டிற் பிரிந்திசையாதது எது?
Exam: Group 2 2013
“சேமமுற நாள் முழுதும் உழைப்பதனாலே” - இந்தத் தேசமெல்லாம் செழுத்திடுது - எனப் பாடியவர்
Choices:
- a) கண்ணதாசன்
- b) தஞ்சை இராமையாதாஸ்
- c) மருதகாசி
- d) பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரனார்
Show Answer / விடை
Answer: மருதகாசி
Exam: Group 2 2013
கீழ்வருவனவற்றுள் கவிஞர் கண்ணதாசன் இயற்றாத நூல் எது?
Choices:
- a) ஆயிரந்தீவு அங்கயற்கண்ணி
- b) இராஜ தண்டனை
- c) மாங்கனி
- d) கொய்யாக்கனி
Show Answer / விடை
Answer: கொய்யாக்கனி
Exam: Group 2 2013
உவமைக் கவிஞர் சுரதா இயற்றிய நூல் எது?
Choices:
- a) நிலவுப் பூ
- b) சூரியகாந்தி
- c) தேன்மழை
- d) பூங்கொடி
Show Answer / விடை
Answer: தேன்மழை
Exam: Group 2 2013
தம்மை நாயகியாகக் கற்பனை செய்து நாரையைத் தூது விட்ட ஆழ்வார் யார்?
Choices:
- a) பொய்கையாழ்வார்
- b) நம்மாழ்வார்
- c) குலசேகர ஆழ்வார்
- d) பெரியாழ்வார்
Show Answer / விடை
Answer: நம்மாழ்வார்
Exam: Group 2 2013
உமர்கய்யாம், ‘ரூபாயத்' என்ற பெயரில் எழுதிய நூலைக் கவிமணி மொழி பெயர்த்தார். அடிக் கோடிட்ட சொல்லின் பொருளை எழுதுக.
Choices:
- a) எட்டடிச்செய்யுள்
- b) இரண்டடிச் செய்யுள்
- c) நான்கடிச் செய்யுள்
- d) இவை எல்லாம் தவறானவை
Show Answer / விடை
Answer: நான்கடிச் செய்யுள்
Exam: Group 2 2013
கீழ்க்காணும் சொற்களில் தொழிற்பெயர் அல்லாததை அறிக.
Choices:
- a) அழுகை
- b) தொல்லை
- c) போக்கு
- d) தொழுகை
Show Answer / விடை
Answer: தொல்லை
Exam: Group 2 2013
செயப்பாட்டு வினைச்சொற்றொடரைக் கண்டறிக.
Choices:
- a) வ.உ.சி. தொல்காப்பியத்தைப் பதிப்பித்தார்
- b) தொல்காப்பியம் வ.உ.சி.யால் பதிப்பிக்கப்பட்டது
- c) பதிப்பித்தார் தொல்காப்பியத்தை வ.உ.சி.
- d) வ.உ.சி. பதிப்பித்தது தொல்காப்பியம்
Show Answer / விடை
Answer: தொல்காப்பியம் வ.உ.சி.யால் பதிப்பிக்கப்பட்டது
Exam: Group 2 2013
'குணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளி கணமேயும் காத்தல் அரிது' – இக்குறளில் அடி எதுகையாவது.
Choices:
- a) குணமென்னும் குன்றேறி
- b) குன்றேறி நின்றார்
- c) குணமென்னும் கணமேயும்
- d) கணமேயும் காத்தல்
Show Answer / விடை
Answer: குணமென்னும் கணமேயும்
Exam: Group 2 2013
வாக்கிய அமைப்பினைக் கண்டறிதல். பள்ளிக்கல்வி இயக்குநர் அறிவியல் கண்காட்சியைத் தொடங்கி வைத்தார் எவ்வகை வாக்கியம் எனச் சுட்டுக.
Choices:
- a) தனி வாக்கியம்
- b) கலவை வாக்கியம்
- c) செயப்பாட்டு வினை வாக்கியம்
- d) பிறவினை வாக்கியம்
Show Answer / விடை
Answer: தனி வாக்கியம்
Exam: Group 2 2013
பிறவினை வாக்கியத்தை கண்டறிக :
Choices:
- a) புறநானூற்றின் கடவுள் வாழ்த்துப் பாடலைப் பாரதம் பாடிய பெருந்தேவனார் பாடியுள்ளார்
- b) அகநானூற்றுப் பாடல்களை மதுரை உப்பூரி குடிகிழார் மகனார் உருத்திர சன்மர் தொகுத்தார்
- c) அகநானூற்றைப் பாண்டியன் உக்கிரப் பெருவழுதி தொகுப்பித்தான்
- d) ஐங்குறுநூறு நூலைப் புலத்துறை முற்றிய கூடலூர்கிழார் தொகுத்தார்
Show Answer / விடை
Answer: அகநானூற்றைப் பாண்டியன் உக்கிரப் பெருவழுதி தொகுப்பித்தான்
Exam: Group 2 2013
பின்வரும் இலக்கணக் குறிப்புக்குரிய பொருந்தாதச் சொல்லைத் தேர்க : பண்புத்தொகை
Choices:
- a) மென்கண்
- b) செய்வினை
- c) நன்கலம்
- d) அருவிலை
Show Answer / விடை
Answer: செய்வினை
Exam: Group 2 2013
'நெறியினில் உயிர்செகுத் திடுவ' - இதில் 'உயிர்செகுத்து' எவ்விலக்கணத்தைச் சார்ந்தது?
Choices:
- a) ஈறுகெட்ட எதிர்மறைப்பெயரெச்சம்
- b) வினையாலணையும் பெயர்
- c) வியங்கோள் வினைமுற்று
- d) இரண்டாம் வேற்றுமைத்தொகை
Show Answer / விடை
Answer: இரண்டாம் வேற்றுமைத்தொகை
Exam: Group 2 2013
சரியானவற்றைத் தேர்க. பொருள் திணை 1. எதிரூன்றல் வெட்சி 2. மீட்டல் வஞ்சி 3. செருவென்றது வாகை 4. எயில்காத்தல் நொச்சி
Choices:
- a) 1ம்,2ம் சரி
- b) 2ம், 3ம் சரி
- c) 3ம்,4ம் சரி
- d) 1ம், 4ம் சரி
Show Answer / விடை
Answer: 3ம்,4ம் சரி
Exam: Group 2 2013
பிரித்தெழுதுக: நெடுநாவாய்
Choices:
- a) நெடு + நாவாய்
- b) நெடுமை + நா + வாய்
- c) நெடுமை + நாவாய்
- d) நெடுநா + வாய்
Show Answer / விடை
Answer: நெடுமை + நாவாய்
Exam: Group 2 2013
'நல்ல' எனும் அடைமொழியைப் பெற்ற நூல் எது?
Choices:
- a) நற்றிணை
- b) குறுந்தொகை
- c) அகநானூறு
- d) ஐங்குறுநூறு
Show Answer / விடை
Answer: குறுந்தொகை
Exam: Group 2 2013
'கடலில் கரைத்த பெருங்காயம் போல' இந்த உவமை வாக்கியம் உணர்த்தும் பொருள்
Choices:
- a) பகர்தல்
- b) கலத்தல்
- c) வீணாதல்
- d) ஏமாறல்
Show Answer / விடை
Answer: வீணாதல்
Exam: Group 2 2013
தெரிநிலை வினையெச்சத்தை எடுத்து எழுதுக.
Choices:
- a) நோயின்றி வாழ்கிறான்
- b) மெல்ல நடந்தான்
- c) நடந்து வந்தான்
- d) நன்கு பாடினான்
Show Answer / விடை
Answer: நடந்து வந்தான்
Exam: Group 2 2013
பொருத்துக: (a) கை 1. துன்பம் (b) நோ 2. கைப்பற்றுதல் (c) யா 3. ஒழுக்கம் (d) வௌ 4. ஒருவகை மரம்
Choices:
- a) 2 4 3 1
- b) 3 4 1 2
- c) 3 2 4 1
- d) 3 1 4 2
Show Answer / விடை
Answer: 3 1 4 2
Exam: Group 2 2013
ஈற்றயலடி ‘சிந்தடி' பெற்று வரும் பா வகை
Choices:
- a) நேரிசைச் சிந்தியல் வெண்பா
- b) இன்னிசைச் சிந்தியல் வெண்பா
- c) நிலைமண்டில ஆசிரியப்பா
- d) நேரிசை ஆசிரியப்பா
Show Answer / விடை
Answer: நேரிசை ஆசிரியப்பா
Exam: Group 2 2013
''சோவியத்து அறிஞர் தால்சுதாய் வழிகாட்டுதலால் திருக்குறள் மூலத்தை நேரடியாகப் படிக்க விரும்பியே தமிழ் பயிலத் தொடங்கினேன்" - எனக் கூறியவர்.
Choices:
- a) பேரறிஞர் அண்ணா
- b) காந்தியடிகள்
- c) பண்டித ஜவஹர்லால் நேரு
- d) ஜி.யு. போப்
Show Answer / விடை
Answer: காந்தியடிகள்
Exam: Group 2 2013
'கவி காளமேகம்' எந்த சமயத்திலிருந்து எந்த சமயத்திற்கு மாறினார்?
Choices:
- a) சைவத்திலிருந்து சமணத்திற்கு மாறினார்
- b) சைவத்திலிருந்து வைணவத்திற்கு மாறினார்
- c) வைணவத்திலிருந்து சைவத்திற்கு மாறினார்
- d) வைணவத்திலிருந்து பௌத்தத்திற்கு மாறினார்
Show Answer / விடை
Answer: வைணவத்திலிருந்து சைவத்திற்கு மாறினார்
Exam: Group 2 2013
உலகத் தமிழரிடையே தமிழுணர்வை உருவாக்கப் பாடுபட்ட பெருஞ்சித்திரனாரின் இதழ் பெயரைத் தேர்ந்தெடு.
Choices:
- a) இந்தியா
- b) குயில்
- c) தமிழ்ச்சிட்டு
- d) மணிக்கொடி
Show Answer / விடை
Answer: தமிழ்ச்சிட்டு
Exam: Group 2 2013
மேதையில் சிறந்ததன்று என முதுமொழிக்காஞ்சி குறிப்பிடுவது
Choices:
- a) கற்றது மறவாமை
- b) ஒழுக்கம் உடைமை
- c) கண்ணஞ்சப் படுதல்
- d) வாய்மை உடைமை
Show Answer / விடை
Answer: கற்றது மறவாமை
Exam: Group 2 2013
இலக்கணக்குறிப்பறிந்து பொருத்துக: (a) வழிக்கரை 1. வினைத்தொகை (b) கரகமலம் 2. உரிச்சொற்றொடர் (c) பொங்குகடல் 3. ஆறாம் வேற்றுமைத்தொகை (d) உறுவேனில் 4. உருவகம்
Choices:
- a) 3 2 4 1
- b) 3 1 2 4
- c) 3 4 1 2
- d) 2 3 4 1
Show Answer / விடை
Answer: 3 4 1 2
Exam: Group 2 2013