Skip to main content

Group 4 Previous Year Questions Topic Syllabus Wise - 2018

தமிழ் (Tamil)

Question 1

ஆதிச்ச நல்லூரில் கண்டெடுக்கப்பட்ட முதுமக்கள் தாழிகள் எந்த காலகட்டத்தைச் சார்ந்தவை?

Choices:

  • a) கி.மு.200 முதல் கி.பி. 200 வரை
  • b) கி.மு.300 முதல் கி.பி. 300 வரை
  • c) கி.மு. 400 முதல் கி.பி. 400 வரை
  • d) கி.மு.200 முதல் கி.பி. 300 வரை
Show Answer / விடை

Answer: கி.மு.300 முதல் கி.பி. 300 வரை

Exam: Group 4 2018

Question 2

கீழே கொடுக்கப்பட்டுள்ளனவற்றுள் பொருத்தமான இணையைத் தேர்வு செய்க.

Choices:

  • a) தினங்களை கொண்டாடுவதை விடுங்கள் - கவிக்கோ
  • b) மண்புழுவல்ல மானிடனே - பாரதி
  • c) கன்று குரல் கேட்ட பசு - தாராபாரதி
  • d) தண்ணீர் போல் பணத்தை செலவு செய்தல் - ஆலந்தூரார்
Show Answer / விடை

Answer: தினங்களை கொண்டாடுவதை விடுங்கள் - கவிக்கோ

Exam: Group 4 2018

Question 3

புதிய பட வீழ்த்திகள் உருவாக இவருடைய கருத்துகளே அடிப்படையாக அமைந்தன

Choices:

  • a) எட்வர்டு மைபிரிட்சு
  • b) ஈஸ்ட்மன்
  • c) தாமஸ் ஆல்வா எடிசன்
  • d) பிரான்சிஸ் சென்கின்சு
Show Answer / விடை

Answer: பிரான்சிஸ் சென்கின்சு

Exam: Group 4 2018

Question 4

தொண்டு செய்து பழுத்தபழம் என்று பாரதிதாசன் போற்றுவது

Choices:

  • a) பாரதியார்
  • b) தந்தை பெரியார்
  • c) காந்தியார்
  • d) அண்ணாதுரையார்
Show Answer / விடை

Answer: தந்தை பெரியார்

Exam: Group 4 2018

Question 5

பாரதியார் யாருடைய சாயலில் வசனகவிதை எழுதிட தொடங்கினார்?

Choices:

  • a) ஜார்ஜ் எல். ஹார்ட்
  • b) வால்ட்விட்மன்
  • c) லிண்ட் ஹோம்
  • d) ஹால் சிப்மேன்
Show Answer / விடை

Answer: வால்ட்விட்மன்

Exam: Group 4 2018

Question 6

நாமக்கல் கவிஞரின் படைப்புகளின் எண்ணிக்கையை பொருத்துக.
(a) இசை நாவல்கள் 1. நான்கு
(b) புதினங்கள் 2. பத்து
(c) கவிதைத் தொகுப்புகள் 3. மூன்று
(d) மொழி பெயர்ப்புகள் 4. ஐந்து

Choices:

  • a) (a) (b) (c) (d) 4 3 1 2
  • b) 3 4 2 1
  • c) 2 4 1 3
  • d) 3 1 4 2
Show Answer / விடை

Answer: 3 4 2 1

Exam: Group 4 2018

Question 7

எந்த நாட்டின் அணுதுளைக்காத சுரங்கப் பாதுகாப்பு பெட்டகத்தில் திருக்குறள் உள்ளது

Choices:

  • a) இங்கிலாந்து
  • b) சிங்கப்பூர்
  • c) உருசியா
  • d) இந்தியா
Show Answer / விடை

Answer: உருசியா

Exam: Group 4 2018

Question 8

மறைமலையடிகள் எழுதிய நாடகத்தைப் பற்றிய ஆராய்ச்சி நூல்

Choices:

  • a) மதங்க சூளாமணி
  • b) மத்தவிலாசம்
  • c) சாகுந்தலம்
  • d) மனோன்மணீயம்
Show Answer / விடை

Answer: சாகுந்தலம்

Exam: Group 4 2018

Question 9

“உழவர் ஏரடிக்கும் சிறு கோலே அரசரது செங்கோலை நடத்தும் கோல்” எனக் கூறியவர்

Choices:

  • a) பாரதியார்
  • b) பாரதிதாசன்
  • c) வில்லிப்புத்தூரார்
  • d) கம்பர்
Show Answer / விடை

Answer: கம்பர்

Exam: Group 4 2018

Question 10

சூலியல் வின்சோன்” பாராட்டிய தமிழறிஞர்

Choices:

  • a) திரு.வி.க.
  • b) மறைமலையடிகள்
  • c) உ.வே.சா.
  • d) கவிமணி
Show Answer / விடை

Answer: உ.வே.சா.

Exam: Group 4 2018

Question 11

தாமே பாடுபட்டு உழைத்து முன்னேற வேண்டும் என்னும் உயர்ந்த எண்ணம், நம் இளைஞர்களிடையே வளர வேண்டும்.” என இளைஞர்களுக்கு உரைத்தவர் யார்?

Choices:

  • a) தமிழ்த் தென்றல் திரு.வி.க
  • b) பெரியார்
  • c) பாவேந்தர் பாரதிதாசன்
  • d) தாரா பாரதி
Show Answer / விடை

Answer: பெரியார்

Exam: Group 4 2018

Question 12

குமரகுருபரரின் ‘நீதி நெறி விளக்கம்’ என்னும் நூலில் எத்தனை பாடல்களுக்கு பரிதிமாற்கலைஞர் உரையெழுதி உரையாசிரியராகவும் விளங்கினார்?

Choices:

  • a) முப்பத்து மூன்று
  • b) ஐம்பது
  • c) ஐம்பத்தொன்று
  • d) ஐம்பத்து மூன்று
Show Answer / விடை

Answer: ஐம்பத்தொன்று

Exam: Group 4 2018

Question 13

தமிழகத்தில் இன்று காணப்பெறும் குடைவரைக் கோயில்களுள் பழமையானது. எங்குள்ளது?

Choices:

  • a) பிள்ளையார்பட்டி
  • b) கழுகு மலை
  • c) திருப்பரங்குன்றம்
  • d) ஆனைமலை
Show Answer / விடை

Answer: பிள்ளையார்பட்டி

Exam: Group 4 2018

Question 14

தன் இனத்தையும் மொழியையும் பாடாத கவிதை வேரில்லாத மரம்; கூடில்லாத பறவை - என்று பாடியவர் யார்?

Choices:

  • a) பாவேந்தர் பாரதிதாசன்
  • b) உமர் கய்யாம்
  • c) இரசூல் கம்ச தோவ்
  • d) க.வைரமுத்து
Show Answer / விடை

Answer: இரசூல் கம்ச தோவ்

Exam: Group 4 2018

Question 15

'நோய்க்கு மருந்து இலக்கியம்' என்று கூறியவரை தேர்வு செய்க

Choices:

  • a) உ. வே. சாமிநாதர்
  • b) மகாவித்துவான் மீனாட்சி சுந்தரனார்
  • c) பரிதிமாற்கலைஞர்
  • d) மறைமலை அடிகளார்
Show Answer / விடை

Answer: மகாவித்துவான் மீனாட்சி சுந்தரனார்

Exam: Group 4 2018

Question 16

“அளவில்சனம் செலவொழியா வழிக்கரையில் அருளுடையார் உளமனைய தண்ணளித்தாய் உறுவேளில் பரிவகற்றி” - இப்பாடல் வரிகள் இடம்பெற்றுள்ள நூல் யாது?

Choices:

  • a) பெரியபுராணம்
  • b) திருவிளையாடற்புராணம்
  • c) சிலப்பதிகாரம்
  • d) சீறாப்புராணம்
Show Answer / விடை

Answer: பெரியபுராணம்

Exam: Group 4 2018

Question 17

‘அரிசி' என்னும் தமிழ்ச் சொல் ‘ஒரைஸா' என எம்மொழிக்குச் சென்றது?

Choices:

  • a) கிரேக்கம்
  • b) இலத்தீன்
  • c) போர்ச்சுகீசியம்
  • d) வடமொழி
Show Answer / விடை

Answer: கிரேக்கம்

Exam: Group 4 2018

Question 18

பேரறிஞர் அண்ணாவிற்கு விருப்பமான இலக்கியம்

Choices:

  • a) கலிங்கத்துப்பரணி
  • b) திருக்குறள்
  • c) கம்பராமாயணம்
  • d) பரிபாடல்
Show Answer / விடை

Answer: கலிங்கத்துப்பரணி

Exam: Group 4 2018

Question 19

தமிழ் மொழி அழகான சித்திரவேலைப்பாடமைந்த வெள்ளித் தட்டு” என்று கூறியவர்

Choices:

  • a) கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை
  • b) ஜி.யு.போப்
  • c) டாக்டர் கிரௌல்
  • d) கால்டுவெல்
Show Answer / விடை

Answer: டாக்டர் கிரௌல்

Exam: Group 4 2018

Question 20

மன்னிப்பு - எம்மொழிச் சொல்

Choices:

  • a) தமிழ்
  • b) தெலுங்கு
  • c) மலையாளம்
  • d) உருது
Show Answer / விடை

Answer: உருது

Exam: Group 4 2018

Question 21

திருப்பனந்தாளிலும், காசியிலும் தம் பெயரால் மடம் நிறுவி உள்ளவர்

Choices:

  • a) இராமலிங்க அடிகளார்
  • b) தாயுமானவர்
  • c) குமரகுருபரர்
  • d) வில்லிபுத்தூரார்
Show Answer / விடை

Answer: குமரகுருபரர்

Exam: Group 4 2018

Question 22

மயிலேறும் பெருமாளிடம் கல்வி கற்றவர்

Choices:

  • a) சுவாமிநாத தேசிகர்
  • b) வீரமாமுனிவர்
  • c) சி. இலக்குவனார்
  • d) மீனாட்சி சுந்தரனார்
Show Answer / விடை

Answer: சுவாமிநாத தேசிகர்

Exam: Group 4 2018

Question 23

“உடம்பார் அழியின் உயிரார் அழிவர் திடம்பட மெய்ஞ்ஞானம் சேரவும் மாட்டார்” இத் திருமந்திரப்பாடல் இடம் பெற்ற தந்திரம் எது?

Choices:

  • a) ஆறாம் தந்திரம்
  • b) இரண்டாம் தந்திரம்
  • c) மூன்றாம் தந்திரம்
  • d) எட்டாம் தந்திரம்
Show Answer / விடை

Answer: மூன்றாம் தந்திரம்

Exam: Group 4 2018

Question 24

‘அங்கவியல்’ திருக்குறளில் எந்தப் பகுப்பில் இடம்பெற்றுள்ளது?

Choices:

  • a) அறத்துப் பால்
  • b) பொருட்பால்
  • c) காமத்துப் பால்
  • d) எதுவுமில்லை
Show Answer / விடை

Answer: பொருட்பால்

Exam: Group 4 2018

Question 25

ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு எழுமையும் ஏமாப்பு உடைத்து இக்குறளில் ஏமாப்பு என்பதன் பொருள் யாது?

Choices:

  • a) பெருமை
  • b) ஏமாற்றம்
  • c) பாதுகாப்பு
  • d) பொறுமை
Show Answer / விடை

Answer: பாதுகாப்பு

Exam: Group 4 2018

Question 26

“அறவுரைக் கோவை” என அழைக்கப் பெறும் நூல்

Choices:

  • a) முதுமொழிக்காஞ்சி
  • b) ஆசாரக் கோவை
  • c) ஏலாதி
  • d) சிறுபஞ்சமூலம்
Show Answer / விடை

Answer: முதுமொழிக்காஞ்சி

Exam: Group 4 2018

Question 27

இங்கிலாந்து மகாராணி விக்டோரியா காலையில் கண் விழித்ததும் முதலில் படித்த நூல்

Choices:

  • a) திருவருட்பா
  • b) திருக்குறள்
  • c) மகாபாரதம்
  • d) இராமாயணம்
Show Answer / விடை

Answer: திருக்குறள்

Exam: Group 4 2018

Question 28

குடிமக்கள் வரலாறே ஆதி காப்பியமாகத் தமிழ்நாட்டில் அமைந்து விளங்குகிறது. அப்படி அமைவது எந்த நூல்?

Choices:

  • a) சீவகசிந்தாமணி
  • b) சிலப்பதிகாரம்
  • c) மணிமேகலை
  • d) கம்பராமாயணம்
Show Answer / விடை

Answer: சிலப்பதிகாரம்

Exam: Group 4 2018

Question 29

எட்டுத்தொகை நூல்களில் ‘நாடகப் பாங்கில்' அமைந்துள்ள நூலினைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Choices:

  • a) குறுந்தொகை
  • b) அகநானூறு
  • c) கலித்தொகை
  • d) ஐங்குறுநூறு
Show Answer / விடை

Answer: கலித்தொகை

Exam: Group 4 2018

Question 30

பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒரே ஒரு நூலாசிரியர் மட்டும் இருநூல் படைத்துள்ளார். அவர் யார்?

Choices:

  • a) கபிலர்
  • b) மூவாதியார்
  • c) நல்லாதனார்
  • d) கணிமேதாவியார்
Show Answer / விடை

Answer: கணிமேதாவியார்

Exam: Group 4 2018

Question 31

“என்காற் சிலம்பு மணியுடை அரியே” இவ்வடிகளில் 'மணி' என்பது எதனைக் குறிக்கும் என்பதைத் தெரிவு செய்க.

Choices:

  • a) பவளம்
  • b) முத்து
  • c) மாணிக்கம்
  • d) மரக்தம்
Show Answer / விடை

Answer: மாணிக்கம்

Exam: Group 4 2018

Question 32

“கூடலில் ஆய்ந்த ஒண்தீந் தமிழின்” என்ற வரிகள் இடம் பெற்றுள்ள நூல் எது?

Choices:

  • a) திருவாசகம்
  • b) மதுரைக் காஞ்சி
  • c) பட்டினப்பாலை
  • d) தமிழ்விடுதூது
Show Answer / விடை

Answer: திருவாசகம்

Exam: Group 4 2018

Question 33

தமிழ், வடமொழி அல்லாது மற்றொரு மொழியிலும் குமரகுருபரர் புலமை மிக்கவராக திகழ்ந்தார். அம்மொழி எதுவெனத் தேர்ந்தெடு

Choices:

  • a) பாலி
  • b) இந்துத்தானி
  • c) கன்னடம்
  • d) உருது
Show Answer / விடை

Answer: இந்துத்தானி

Exam: Group 4 2018

Question 34

“பொன்னும் துகிரும் முத்தும் மன்னிய” – இத்தொடரில் உள்ள “துகிர்” என்பதன் பொருளை தேர்ந்தெடுக்க.

Choices:

  • a) மாணிக்கம்
  • b) மரகதம்
  • c) இரத்தினம்
  • d) பவளம்
Show Answer / விடை

Answer: பவளம்

Exam: Group 4 2018

Question 35

“தீம்பிழி எந்திரம் பந்தல் வருந்த” இந்த வரிகள் இடம் பெற்றுள்ள நூல் எது?

Choices:

  • a) பெருங்கதை
  • b) சீவகசிந்தாமணி
  • c) பதிற்றுப்பத்து
  • d) பரிபாடல்
Show Answer / விடை

Answer: பதிற்றுப்பத்து

Exam: Group 4 2018

Question 36

உத்தம சோழப் பல்லவர் என்னும் பட்டம் பெற்றவர்

Choices:

  • a) கம்பர்
  • b) சேக்கிழார்
  • c) புகழேந்தி
  • d) ஒட்டக்கூத்தர்
Show Answer / விடை

Answer: சேக்கிழார்

Exam: Group 4 2018

Question 37

புள்ளுறு புன்கண் தீர்த்தோன்' இவ்வடிகளில் இடம்பெறும் பறவையினை தேர்ந்தெடுக்க.

Choices:

  • a) காகம்
  • b) கிளி
  • c) புறா
  • d) ஆந்தை
Show Answer / விடை

Answer: புறா

Exam: Group 4 2018

Question 38

பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார் இறைவன் அடிசேரா தார் – இக்குறளில் பயின்று வரும் அணியை எழுதுக?

Choices:

  • a) உவமையணி
  • b) நிர்ல்நிறை அணி
  • c) வேற்றுப் பொருள் வைப்பு அணி
  • d) ஏகதேச உருவக அணி
Show Answer / விடை

Answer: ஏகதேச உருவக அணி

Exam: Group 4 2018

Question 39

‘முட்டையிட்டது சேவலா, பெட்டையா'?

Choices:

  • a) திணைவழு
  • b) விடைவழு
  • c) மரபுவழு
  • d) வினாவழு
Show Answer / விடை

Answer: வினாவழு

Exam: Group 4 2018

Question 40

பொருந்தாதச் சொல்லைக் கண்டறிதல் : மாணிக்கம், முத்து, பவளம், கிளிஞ்சல்.

Choices:

  • a) மாணிக்கம்
  • b) முத்து
  • c) பவளம்
  • d) கிளிஞ்சல்
Show Answer / விடை

Answer: கிளிஞ்சல்

Exam: Group 4 2018

Question 41

சொல்லைப் பொருளோடு பொருத்துக :
| சொல் | பொருள் |
|---|---|
| (a) வனப்பு | 1. காடு |
| (b) அடவி | 2. பக்கம் |
| (c) மருங்கு | 3. இனிமை |
| (d) மதுரம் | 4. அழகு |

Choices:

  • a) (A) 2 1 4 3
  • b) (B) 3 2 1 4
  • c) (C) 4 1 2 3
  • d) (D) 1 2 3 4
Show Answer / விடை

Answer: (C) 4 1 2 3

Exam: Group 4 2018

Question 42

பிழையற்ற வாக்கியம் எது?

Choices:

  • a) ஓர் மாவட்டத்தில் ஓர் அமைச்சர் அவருடைய மகனோடு சுற்றுலா மேற்க்கொண்டார்
  • b) ஒரு மாவட்டத்தில் ஒரு அமைச்சர் அவரது மகனோடு சுற்றுலா மேற்க்கொண்டார்
  • c) ஒரு மாவட்டத்தில் ஓர் அமைச்சர் அவருடைய மகனோடு சுற்றுலா மேற்கொண்டார்
  • d) ஓர் மாவட்டத்தில் ஒரு அமைச்சர் அவரது மகனோடு சுற்றுலா மேற்க்கொண்டார்
Show Answer / விடை

Answer: ஒரு மாவட்டத்தில் ஓர் அமைச்சர் அவருடைய மகனோடு சுற்றுலா மேற்கொண்டார்

Exam: Group 4 2018

Question 43

'எழுவாய் செய்யும் வினையைக் கொண்டு முடியும் தொடர்' எவ்வகைத் தொடர் என்று தேர்ந்தெடு.

Choices:

  • a) செயப்பாட்டு வினைத் தொடர்
  • b) கட்டளைத் தொடர்
  • c) அயற்கூற்றுத் தொடர்
  • d) செய்வினைத் தொடர்
Show Answer / விடை

Answer: செய்வினைத் தொடர்

Exam: Group 4 2018

Question 44

பொருத்துக :
| | |
|---|---|
| (a) என்றல் | 1. முற்றும்மை |
| (b) நுந்தை | 2. குறிப்பு வினைமுற்று |
| (c) யாவையும் | 3. மருஉ |
| (d) நன்று | 4. தொழிற்பெயர் |

Choices:

  • a) (A) 4 3 1 2
  • b) (B) 3 4 2 1
  • c) (C) 2 4 1 3
  • d) (D) 4 3 2 1
Show Answer / விடை

Answer: (A) 4 3 1 2

Exam: Group 4 2018

Question 45

உம்மைத்தொகையில் 'உம்' என்னும் இடைச்சொல் எவ்வாறு மறைந்து வரும் என்பதை தேர்ந்தெடு.

Choices:

  • a) முதலில் வரும்
  • b) இடையில் வரும்
  • c) இடையிலும் இறுதியிலும் வரும்
  • d) இறுதியில் வரும்
Show Answer / விடை

Answer: இடையிலும் இறுதியிலும் வரும்

Exam: Group 4 2018

Question 46

ஒரு பெயர்ச்சொல்லின் பொருளைச் செயப்படு பொருளாக வேறுபடுத்துவது எவ்வகை வேற்றுமை எனத் தேர்ந்தெடு

Choices:

  • a) மூன்றாம் வேற்றுமை
  • b) ஐந்தாம் வேற்றுமை
  • c) ஆறாம் வேற்றுமை
  • d) இரண்டாம் வேற்றுமை
Show Answer / விடை

Answer: இரண்டாம் வேற்றுமை

Exam: Group 4 2018

Question 47

பின்வருவனவற்றுள் எது உருவகமன்று?

Choices:

  • a) மொழியமுது
  • b) அடிமலர்
  • c) தமிழ்த்தேன்
  • d) கயற்கண்
Show Answer / விடை

Answer: கயற்கண்

Exam: Group 4 2018

Question 48

‘தானம் தவமிரண்டும் தங்கா வியனுலகம்' இக்குறள்பாவில் இடம்பெற்றுள்ள சீர்மோனை பெயரினைத் தேர்ந்தெடு

Choices:

  • a) கீழ்க்கதுவாய் மோனை.
  • b) கூழை மோனை
  • c) ஒரூஉ மோனை
  • d) மேற்கதுவாய் மோனை
Show Answer / விடை

Answer: கூழை மோனை

Exam: Group 4 2018

Question 49

“உயிர்வரின் உக்குறள் மெய்விட்டு ஓடும்” -என்னும் புணர்ச்சி விதிப்படி புணர்ந்துள்ள சொல் எது?

Choices:

  • a) கற்றா
  • b) கன்றா
  • c) கறா
  • d) கன்று
Show Answer / விடை

Answer: கன்றா

Exam: Group 4 2018

Question 50

“விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து உள்நின்று உடற்றும் பசி” இக்குறட்பாவில் காணலாகும் மோனை எது?

Choices:

  • a) மேற்கதுவாய் மோனை
  • b) கீழ்க்கதுவாய் மோனை
  • c) கூழை மோனை
  • d) ஒரூஉ மோனை
Show Answer / விடை

Answer: கூழை மோனை

Exam: Group 4 2018

Question 51

கீழ்க்கண்ட கூற்றுகளில் எது சரியானது?

Choices:

  • a) சால, தவ முதலிய உரிச்சொற்களின் பின் வல்லினம் மிகாது
  • b) வினைத்தொகையில் வல்லினம் மிகாது
  • c) வன்றொடர்க் குற்றியலுகரத்தின் பின் வல்லினம் மிகாது
  • d) உவமைத் தொகையில் வல்லினம் மிகாது
Show Answer / விடை

Answer: வினைத்தொகையில் வல்லினம் மிகாது

Exam: Group 4 2018

Question 52

தொகை நிலைத் தொடர்களுக்குப் புறத்தே அல்லாத சில மொழிகள் தொக்கி நின்று பொருள் தருவது எது என தேர்ந்தெடு

Choices:

  • a) பண்புத்தொகை
  • b) அன்மொழித்தொகை
  • c) வினைத்தொகை
  • d) உவமைத்தொகை
Show Answer / விடை

Answer: அன்மொழித்தொகை

Exam: Group 4 2018

Question 53

பரிதிமாற்கலைஞருக்கு “திராவிட சாஸ்திரி” என்னும் பட்டத்தை வழங்கியவர்

Choices:

  • a) மு.சி.பூர்ணலிங்கம்
  • b) சி.வை. தாமோதரனார்
  • c) மறைமலையடிகள்
  • d) திரு.வி.கலியாண சுந்தரனார்
Show Answer / விடை

Answer: சி.வை. தாமோதரனார்

Exam: Group 4 2018

Question 54

‘எவ்வகைச் செய்தியும் உவமங்காட்டி' என ஓவியச் சிறப்பைப் பழந்தமிழர் அறிந்திருந்ததைக் காட்டும் இவ்வடி இடம் பெற்ற நூல்

Choices:

  • a) குற்றாலக் குறவஞ்சி
  • b) முல்லைப் பாட்டு
  • c) மதுரைக் காஞ்சி
  • d) திருமுருகாற்றுப்படை
Show Answer / விடை

Answer: மதுரைக் காஞ்சி

Exam: Group 4 2018

Question 55

“தென்னிந்தியாவின் ஏதென்ஸ்' – என அழைக்கப்படும் நகரம்

Choices:

  • a) திருநெல்வேலி
  • b) தஞ்சை
  • c) திருச்சி
  • d) மதுரை
Show Answer / விடை

Answer: மதுரை

Exam: Group 4 2018

Question 56

“உலகினில் நாகரிகம் முற்றும் அழிந்து விட்டாலும் திருக்குறளும் கம்பன் காவியமும் இருந்தால் போதும்; மீண்டும் அதனைப் புதுப்பித்துவிடலாம்” என்று கூறியவர் யார்?

Choices:

  • a) ஜி.யு. போப்
  • b) கால்டுவெல்
  • c) பாரதிதாசன்
  • d) பாரதியார்
Show Answer / விடை

Answer: கால்டுவெல்

Exam: Group 4 2018

Question 57

நாடகம் படைத்தல், நடித்தல், நாடக இலக்கணம் இயற்றல் ஆகிய முக்கோணங்களிலும் நாடகத் தொண்டாற்றியவர் யார்?

Choices:

  • a) தவத்திரு சங்கரதாஸ்
  • b) பரிதிமாற் கலைஞர்
  • c) பம்மல் சம்பந்தனார்
  • d) திண்டிவனம் ராமசாமிராஜா
Show Answer / விடை

Answer: பரிதிமாற் கலைஞர்

Exam: Group 4 2018

Question 58

கீழ்க்கண்டவற்றுள் பறவைகள் சரணாலயம் இல்லாத இடத்தைத் தேர்ந்தெடு

Choices:

  • a) கரைவெட்டி
  • b) கோவன்புத்தூர்
  • c) வெள்ளோடு
  • d) சித்திரங்குடி
Show Answer / விடை

Answer: கோவன்புத்தூர்

Exam: Group 4 2018

Question 59

ஜவஹர்லால் நேரு சிறை வைக்கப்பட்டிருந்த அல்மோரா சிறைச்சாலை எந்த மாநிலத்திலுள்ளது என்பதைத் தெரிவு செய்க

Choices:

  • a) மேற்கு வங்காளம்
  • b) குஜராத்
  • c) உத்தராஞ்சல்
  • d) உத்தர பிரதேசம்
Show Answer / விடை

Answer: உத்தராஞ்சல்

Exam: Group 4 2018

Question 60

கண்ணதாசன் படைத்த நாடகம்

Choices:

  • a) மாங்கனி
  • b) ஆட்டனத்தி ஆதிமந்தி
  • c) கல்லக்குடி மகா காவியம்
  • d) இராசதண்டனை
Show Answer / விடை

Answer: இராசதண்டனை

Exam: Group 4 2018

Question 61

கீழ்க்கண்டவற்றுள் பொருந்தாததைத் தேர்ந்தெடு. அயற்கூற்றில் வருவன

Choices:

  • a) மேற்கோள்குறிகள் வராது
  • b) தன்மை, முன்னிலைப் பெயர்கள் படர்க்கைப் பெயர்களாக மாறாது
  • c) அது, அவை – அங்கே என மாறும்
  • d) காலப் பெயர்கள் அந்நாள், மறுநாள் என மாறும்
Show Answer / விடை

Answer: தன்மை, முன்னிலைப் பெயர்கள் படர்க்கைப் பெயர்களாக மாறாது

Exam: Group 4 2018

Question 62

“புத்தகம் வாசிப்பதனை கடமையாக் ஆக்குதல் கூடாது; கட்டாயப்படுத்தவும் கூடாது. 'அப்படி செய்தால், புத்தகம் வாசிப்பு மகிழ்ச்சியைத் தராது” என்று கூறியவரை தேர்ந்தெடு

Choices:

  • a) டாக்டர். மு. வரதராசனார்
  • b) பேரறிஞர். அண்ணா
  • c) நேரு
  • d) காந்தி
Show Answer / விடை

Answer: நேரு

Exam: Group 4 2018

Question 63

கீழ்க்கண்டவற்றுள் தேவநேயப் பாவாணரின் சிறப்புகளில் பொருந்தாததை தேர்ந்தெடு

Choices:

  • a) செந்தமிழ் ஞாயிறு
  • b) செந்தமிழ்ச் செல்வர்
  • c) இலக்கியச் செம்மல்
  • d) தமிழ்ப் பெருங்காவலர்
Show Answer / விடை

Answer: இலக்கியச் செம்மல்

Exam: Group 4 2018

Question 64

‘உன்னுள் இருக்கும் ஆண்டவனின் அரசு' என்னும் நூலை எழுதியவர் யார்?

Choices:

  • a) இபான்
  • b) எச். ஏ. கிருட்டிணப்பிள்ளை
  • c) தால் சுதாய்
  • d) முனைவர் எமினோ
Show Answer / விடை

Answer: தால் சுதாய்

Exam: Group 4 2018

Question 65

பொருத்துக :
(a) பெருஞ்சித்திரனார் 1. காவியப்பாவை
(b) சுரதா 2. குறிஞ்சித்திட்டு
(c) முடியரசன் 3. கனிச்சாறு
(d) பாரதிதாசன் 4. தேன்மழை

Choices:

  • a) (a) (b) (c) (d) 2 3 4 1
  • b) 3 4 1 2
  • c) 2 4 1 3
  • d) 4 3 2 1
Show Answer / விடை

Answer: 3 4 1 2

Exam: Group 4 2018

Question 66

பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் படைப்புகளுள் இல்லாத ஒன்று எது?

Choices:

  • a) கொய்யாக்கனி
  • b) கனிச்சாறு
  • c) கல்லக்குடி மாகாவியம்
  • d) நூறாசிரியம்
Show Answer / விடை

Answer: கல்லக்குடி மாகாவியம்

Exam: Group 4 2018

Question 67

பெரியாரின் வாழ்க்கை நிகழ்வுகளில் சரியானவற்றைப் பொருத்துக :
(a) யுனெஸ்கோ விருது 1. 21,400
(b) அஞ்சல் தலை 2. 10,700
(c) பங்கேற்ற கூட்டங்கள் 3. 1970
(d) உரையாற்றிய மணிநேரம் 4. 1978

Choices:

  • a) (a) (b) (c) (d) 4 3 1 2
  • b) 3 4 2 1
  • c) 2 3 4 1
  • d) 1 3 4 2
Show Answer / விடை

Answer: 3 4 2 1

Exam: Group 4 2018

Question 68

திருவிளையாடற் புராணத்தில் உள்ள காண்டங்களில் பொருந்தாத காண்டத்தின் பெயரினைத் தேர்ந்தெடு

Choices:

  • a) மதுரைக் காண்டம்
  • b) கூடற் காண்டம்
  • c) வஞ்சிக் காண்டம்
  • d) திருவாலவாய்க் காண்டம்
Show Answer / விடை

Answer: வஞ்சிக் காண்டம்

Exam: Group 4 2018

Question 69

“நரை முடித்துச் சொல்லால் முறை செய்தான்” இத்தொடரில் குறிப்பிடப்படுகின்ற அரசன் யார் என்று தேர்ந்தெடு

Choices:

  • a) முதலாம் குலோத்துங்கன்
  • b) இராசராசன்
  • c) கரிகாலன்
  • d) பராந்தகன்
Show Answer / விடை

Answer: கரிகாலன்

Exam: Group 4 2018

Question 70

‘மணிமேகலை’ - அமுதசுரபியைப் பெற்றிட உதவியவர்

Choices:

  • a) மணிமேகலா தெய்வம்
  • b) சுதமதி
  • c) தீவதிலகை
  • d) அறவண அடிகள்
Show Answer / விடை

Answer: தீவதிலகை

Exam: Group 4 2018

Question 71

“சான்றோர் செல்வம் என்பது சேர்ந்தோர் புன்கண் அஞ்சும் பண்பின் மென்கண் செல்வம் செல்வமென் பதுவே” – இப்பாடல் வரிகளைப் பாடியவர் யார்?

Choices:

  • a) முன்றுறை அரையனார்
  • b) காரியாசான்
  • c) மிளைகிழான் நல்வேட்டனார்
  • d) கணிமேதாவியார்
Show Answer / விடை

Answer: மிளைகிழான் நல்வேட்டனார்

Exam: Group 4 2018

Question 72

தருமிக்கு பொற்கிழி அளித்த படலம் எந்த காண்டத்தில் அமைந்துள்ளது

Choices:

  • a) மதுரைக் காண்டம்
  • b) சுந்தர காண்டம்
  • c) திருவாலவாய்க் காண்டம்
  • d) கூடற் காண்டம்
Show Answer / விடை

Answer: திருவாலவாய்க் காண்டம்

Exam: Group 4 2018

Question 73

‘அஷ்டப்பிரபந்தம்' கீழ்க்கண்டவற்றுள் எதனைக் குறிக்கும்?

Choices:

  • a) எட்டு சிற்றிலக்கியங்கள்
  • b) எட்டு பெருங்காப்பியங்கள்
  • c) ஆறு நூல்கள்
  • d) ஒன்பது உரைகள்
Show Answer / விடை

Answer: எட்டு சிற்றிலக்கியங்கள்

Exam: Group 4 2018

Question 74

காந்திபுராணத்தில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை

Choices:

  • a) ஓராயிரத்து முப்பத்து நான்கு
  • b) ஈராயிரத்து முப்பத்து நான்கு
  • c) மூவாயிரத்து முப்பத்து நான்கு
  • d) நான்காயிரத்து முப்பத்து நான்கு
Show Answer / விடை

Answer: ஈராயிரத்து முப்பத்து நான்கு

Exam: Group 4 2018

Question 75

“நல்லது செய்த லாற்றீ ராயினும் அல்லது செய்த லோம்பு மினது தான்” -என்ற வரிகள் இடம் பெற்ற நூல் எது?

Choices:

  • a) அகநானூறு
  • b) புறநானூறு
  • c) திருக்குறள்
  • d) ஐங்குறுநூறு
Show Answer / விடை

Answer: புறநானூறு

Exam: Group 4 2018

Question 76

மறைமலையடிகளாரின் மகள்

Choices:

  • a) கமலாம்பிகை அம்மையார்
  • b) கெசவல்லி அம்மையார்
  • c) நீலாம்பிகை அம்மையார்
  • d) ஞானாம்பிகை அம்மையார்
Show Answer / விடை

Answer: நீலாம்பிகை அம்மையார்

Exam: Group 4 2018

Question 77

‘உண்பது நாழி உடுப்பவை இரண்டே' – என்ற பாடலடி இடம்பெற்றுள்ள நூல்

Choices:

  • a) ஆத்திச்சூடி
  • b) நாலடியார்
  • c) புறநானூறு
  • d) பழமொழி நானூறு
Show Answer / விடை

Answer: புறநானூறு

Exam: Group 4 2018

Question 78

‘போரை ஒழிமின்' – என்ற கோவூர் கிழாரின் அறிவுரையைக் கேட்டு போரை நிறுத்திய மன்னன் யார்?

Choices:

  • a) நெடுங்கிள்ளி
  • b) நலங்கிள்ளி
  • c) அதியமான்
  • d) சேரமான் நெடுமான் அஞ்சி
Show Answer / விடை

Answer: நெடுங்கிள்ளி

Exam: Group 4 2018

Question 79

பெருவெடிப்புக் கொள்கையின்படி இப்பேரண்டம் விரிவடைந்து நிற்பதைக் கூறும் பாடல் இடம்பெறும் நூல்

Choices:

  • a) தேவாரம்
  • b) திருவாசகம்
  • c) புறநானூறு
  • d) பதிற்றுப்பத்து
Show Answer / விடை

Answer: திருவாசகம்

Exam: Group 4 2018

Question 80

'தேம்பாவணி' என்பது

Choices:

  • a) கிறித்தவக் காப்பியம்
  • b) இசுலாமியக் காப்பியம்
  • c) வைணவக் காப்பியம்
  • d) சைவக் காப்பியம்
Show Answer / விடை

Answer: கிறித்தவக் காப்பியம்

Exam: Group 4 2018

Question 81

“தண்டமிழ் ஆசான்” என்று பாராட்டப் பெற்றவர்.

Choices:

  • a) இளங்கோவடிகள்
  • b) கம்பர்
  • c) திருவள்ளுவர்
  • d) சீத்தலைச்சாத்தனார்
Show Answer / விடை

Answer: சீத்தலைச்சாத்தனார்

Exam: Group 4 2018

Question 82

திருவள்ளுவமாலையில் திருக்குறளைப் புகழ்ந்து பாடியுள்ள புலவர்கள் எத்தனைப் பேர்?

Choices:

  • a) ஐம்பத்து மூவர்
  • b) எழுபத்தைவர்
  • c) அறுபதின்மர்
  • d) நூற்றுவர்
Show Answer / விடை

Answer: ஐம்பத்து மூவர்

Exam: Group 4 2018

Question 83

எனத் தொடங்கும் திருப்பதிகம் பாடிப் பாம்பின் விடத்தை அப்பர் போக்கியருளினார்.

Choices:

  • a) உலகெலாம்
  • b) ஒன்றுகொலாம்
  • c) உலகம் யாவையும்
  • d) திருமறையோர்
Show Answer / விடை

Answer: ஒன்றுகொலாம்

Exam: Group 4 2018

Question 84

பொருத்துக :
நூல் நூலாசிரியர்
(a) களவழி நாற்பது 1. முன்றுறையரையனார்
(b) கைந்நிலை 2. பொய்கையார்
(c) கார் நாற்பது 3. புல்லங்காடனார்
(d) பழமொழி 4. கண்ணங்கூத்தனார்

Choices:

  • a) (a) (b) (c) (d) 2 3 4 1
  • b) 1 2 3 4
  • c) 4 3 1 2
  • d) 3 1 2 4
Show Answer / விடை

Answer: 2 3 4 1

Exam: Group 4 2018

Question 85

‘அறுமோ, நரி நக்கிற்று என்று கடல்'? - இது பயின்று வந்த நூல் எது?

Choices:

  • a) பழமொழி
  • b) நாலடியார்
  • c) திருக்குறள்
  • d) ஆசாரக் கோவை
Show Answer / விடை

Answer: பழமொழி

Exam: Group 4 2018

Question 86

தமிழெண்களைக் கூட்டுக : ருஅ + கூஅ = ?

Choices:

  • a) கூஉக
  • b) ககூஉ
  • c) கருக
  • d) கஉகூ
Show Answer / விடை

Answer: கஉகூ

Exam: Group 4 2018

Question 87

ஆற்றீர் - பகுபத உறுப்பிலக்கணத்தின் படி எவ்வாறு பிரியும்?

Choices:

  • a) ஆற்று + ஈர்
  • b) ஆறு + ஈர்
  • c) ஆ + இற்று + ஈர்
  • d) ஆற்று + ஆ + ஈர்
Show Answer / விடை

Answer: ஆற்று + ஆ + ஈர்

Exam: Group 4 2018

Question 88

தமிழ் ஓசை மொழி.

Choices:

  • a) செப்பல்
  • b) தூங்கல்
  • c) மெல்
  • d) துள்ளல்
Show Answer / விடை

Answer: மெல்

Exam: Group 4 2018

Question 89

“சான்றாண்மை” – அசை பிரித்துக் காட்டுதலில் சரியான விடையைத் தேர்ந்தெடு,

Choices:

  • a) சா + ன்றா + ண்மை
  • b) சான் + றாண் + மை
  • c) சான் + றா + ண்மை
  • d) சான் + றாண்மை
Show Answer / விடை

Answer: சான் + றாண் + மை

Exam: Group 4 2018

Question 90

புறத்திணைகள் எத்தனை வகைப்படும்.

Choices:

  • a) பன்னிரெண்டு
  • b) ஏழு
  • c) ஐந்து
  • d) ஒன்பது
Show Answer / விடை

Answer: பன்னிரெண்டு

Exam: Group 4 2018

Question 91

நான்காம் வேற்றுமை சொல்லுருபுகள் எவை?

Choices:

  • a) கொண்டு, உடன்
  • b) பொருட்டு, நிமித்தம்
  • c) இருந்து, நின்று
  • d) உடைய
Show Answer / விடை

Answer: பொருட்டு, நிமித்தம்

Exam: Group 4 2018

Question 92

பாஞ்சாலி சபதம் இலக்கியத்தில் ‘குளிர்காவுஞ்' இதில் இடம்பெற்றுள்ள ‘கா' என்பதன் பொருளைத் தேர்ந்தெடுக்க:

Choices:

  • a) சோலை
  • b) பாலைவனம்
  • c) வயல்
  • d) காடு
Show Answer / விடை

Answer: காடு

Exam: Group 4 2018

Question 93

“நேர நிகர அன்ன இன்ன என்பவும் பிறவும் உவமத் துருபே” என்ற வரிகள் இடம்பெற்றுள்ள நூல் எது?

Choices:

  • a) தொல்காப்பியம்
  • b) நன்னூல்
  • c) யாப்பருங்கலக் காரிகை
  • d) அகத்தியம்
Show Answer / விடை

Answer: நன்னூல்

Exam: Group 4 2018

Question 94

நாட்டைக் காக்க ஐவர் போர்க்களம் சென்றனர் என்னும் தொடரில் ‘ஐவர்' என்பதன் இலக்கணம் யாது?

Choices:

  • a) ஒன்றொழி பொதுச் சொல்
  • b) இனங்குறித்தல்
  • c) தொடர்மொழி
  • d) பொதுமொழி
Show Answer / விடை

Answer: ஒன்றொழி பொதுச் சொல்

Exam: Group 4 2018

Question 95

“தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே நாவினாற் சுட்ட வடு” - இக்குறட்பாவில் பயின்று வரும் அணி யாது?

Choices:

  • a) வேற்றுமையணி
  • b) இல்பொருள் உவமையணி
  • c) ஏகதேச உருவக அணி
  • d) எடுத்துக்காட்டு உவமையணி
Show Answer / விடை

Answer: வேற்றுமையணி

Exam: Group 4 2018

Question 96

“இழுக்கல் உடையுழி ஊற்றுக்கோல் அற்றே ஒழுக்க முடையார்வாய்ச் சொல்” இக்குறட்பாவில் உள்ள உவமையின் பொருளை தேர்ந்தெடு.

Choices:

  • a) நிலம் - வாழ்க்கை
  • b) ஊன்றுகோல் - பெரியோர் சொல்
  • c) ஊன்றுகோல் - நிலம்
  • d) ஒழுக்கம் - வாய்ச்சொல்
Show Answer / விடை

Answer: ஊன்றுகோல் - பெரியோர் சொல்

Exam: Group 4 2018

Question 97

“பட்டியுள் காளை படிபால் கறக்குமே நல்ல பசு வேளை தவிரா துழும்” இப்பாடல் அடிகளில் இடம்பெற்றுள்ள பொருள்கோள் வகையினை தேர்ந்தெடு.

Choices:

  • a) அடிமறிமாற்றுப் பொருள்கோள்
  • b) கொண்டு கூட்டுப் பொருள்கோள்
  • c) மொழிமாற்றுப் பொருள்கோள்
  • d) விற்பூட்டுப் பொருள்கோள்
Show Answer / விடை

Answer: கொண்டு கூட்டுப் பொருள்கோள்

Exam: Group 4 2018

Question 98

“அண்ணம் நுனிநா வருட” எவ்வெழுத்துகள் தோன்றும்?

Choices:

  • a) ரழ வரும்
  • b) தந வரும்
  • c) றன வரும்
  • d) யத் தோன்றும்
Show Answer / விடை

Answer: ரழ வரும்

Exam: Group 4 2018

Question 99

னல முன்னும் ணள முன்னும் தநக்கள் புணரும் விதிப்படி பின்வருவனவற்றுள் எது சரி?

Choices:

  • a) னல முன் டணவும் ணள முன் றனவும்
  • b) னல முன் றடவும் ணள முன் னணவும்
  • c) னல முன் றனவும் ணளமுன் டணவும்
  • d) னல முன் றணவும் ணளமுன் டனவும்
Show Answer / விடை

Answer: னல முன் றனவும் ணளமுன் டணவும்

Exam: Group 4 2018

Question 100

வித்தொடு சென்ற வட்டி” என்னும் நற்றிணை வரியில் குறிப்பிடப்படும் வட்டி என்பதன் பொருள் என்ன?

Choices:

  • a) பனையோலைப் பெட்டி
  • b) வயல்
  • c) வட்ட வடிவு
  • d) எல்லை
Show Answer / விடை

Answer: பனையோலைப் பெட்டி

Exam: Group 4 2018