Group 4 Previous Year Questions Topic Syllabus Wise - 2018
தமிழ் (Tamil)
ஆதிச்ச நல்லூரில் கண்டெடுக்கப்பட்ட முதுமக்கள் தாழிகள் எந்த காலகட்டத்தைச் சார்ந்தவை?
Choices:
- a) கி.மு.200 முதல் கி.பி. 200 வரை
- b) கி.மு.300 முதல் கி.பி. 300 வரை
- c) கி.மு. 400 முதல் கி.பி. 400 வரை
- d) கி.மு.200 முதல் கி.பி. 300 வரை
Show Answer / விடை
Answer: கி.மு.300 முதல் கி.பி. 300 வரை
Exam: Group 4 2018
கீழே கொடுக்கப்பட்டுள்ளனவற்றுள் பொருத்தமான இணையைத் தேர்வு செய்க.
Choices:
- a) தினங்களை கொண்டாடுவதை விடுங்கள் - கவிக்கோ
- b) மண்புழுவல்ல மானிடனே - பாரதி
- c) கன்று குரல் கேட்ட பசு - தாராபாரதி
- d) தண்ணீர் போல் பணத்தை செலவு செய்தல் - ஆலந்தூரார்
Show Answer / விடை
Answer: தினங்களை கொண்டாடுவதை விடுங்கள் - கவிக்கோ
Exam: Group 4 2018
புதிய பட வீழ்த்திகள் உருவாக இவருடைய கருத்துகளே அடிப்படையாக அமைந்தன
Choices:
- a) எட்வர்டு மைபிரிட்சு
- b) ஈஸ்ட்மன்
- c) தாமஸ் ஆல்வா எடிசன்
- d) பிரான்சிஸ் சென்கின்சு
Show Answer / விடை
Answer: பிரான்சிஸ் சென்கின்சு
Exam: Group 4 2018
தொண்டு செய்து பழுத்தபழம் என்று பாரதிதாசன் போற்றுவது
Choices:
- a) பாரதியார்
- b) தந்தை பெரியார்
- c) காந்தியார்
- d) அண்ணாதுரையார்
Show Answer / விடை
Answer: தந்தை பெரியார்
Exam: Group 4 2018
பாரதியார் யாருடைய சாயலில் வசனகவிதை எழுதிட தொடங்கினார்?
Choices:
- a) ஜார்ஜ் எல். ஹார்ட்
- b) வால்ட்விட்மன்
- c) லிண்ட் ஹோம்
- d) ஹால் சிப்மேன்
Show Answer / விடை
Answer: வால்ட்விட்மன்
Exam: Group 4 2018
நாமக்கல் கவிஞரின் படைப்புகளின் எண்ணிக்கையை பொருத்துக.
(a) இசை நாவல்கள் 1. நான்கு
(b) புதினங்கள் 2. பத்து
(c) கவிதைத் தொகுப்புகள் 3. மூன்று
(d) மொழி பெயர்ப்புகள் 4. ஐந்து
Choices:
- a) (a) (b) (c) (d) 4 3 1 2
- b) 3 4 2 1
- c) 2 4 1 3
- d) 3 1 4 2
Show Answer / விடை
Answer: 3 4 2 1
Exam: Group 4 2018
எந்த நாட்டின் அணுதுளைக்காத சுரங்கப் பாதுகாப்பு பெட்டகத்தில் திருக்குறள் உள்ளது
Choices:
- a) இங்கிலாந்து
- b) சிங்கப்பூர்
- c) உருசியா
- d) இந்தியா
Show Answer / விடை
Answer: உருசியா
Exam: Group 4 2018
மறைமலையடிகள் எழுதிய நாடகத்தைப் பற்றிய ஆராய்ச்சி நூல்
Choices:
- a) மதங்க சூளாமணி
- b) மத்தவிலாசம்
- c) சாகுந்தலம்
- d) மனோன்மணீயம்
Show Answer / விடை
Answer: சாகுந்தலம்
Exam: Group 4 2018
“உழவர் ஏரடிக்கும் சிறு கோலே அரசரது செங்கோலை நடத்தும் கோல்” எனக் கூறியவர்
Choices:
- a) பாரதியார்
- b) பாரதிதாசன்
- c) வில்லிப்புத்தூரார்
- d) கம்பர்
Show Answer / விடை
Answer: கம்பர்
Exam: Group 4 2018
சூலியல் வின்சோன்” பாராட்டிய தமிழறிஞர்
Choices:
- a) திரு.வி.க.
- b) மறைமலையடிகள்
- c) உ.வே.சா.
- d) கவிமணி
Show Answer / விடை
Answer: உ.வே.சா.
Exam: Group 4 2018
தாமே பாடுபட்டு உழைத்து முன்னேற வேண்டும் என்னும் உயர்ந்த எண்ணம், நம் இளைஞர்களிடையே வளர வேண்டும்.” என இளைஞர்களுக்கு உரைத்தவர் யார்?
Choices:
- a) தமிழ்த் தென்றல் திரு.வி.க
- b) பெரியார்
- c) பாவேந்தர் பாரதிதாசன்
- d) தாரா பாரதி
Show Answer / விடை
Answer: பெரியார்
Exam: Group 4 2018
குமரகுருபரரின் ‘நீதி நெறி விளக்கம்’ என்னும் நூலில் எத்தனை பாடல்களுக்கு பரிதிமாற்கலைஞர் உரையெழுதி உரையாசிரியராகவும் விளங்கினார்?
Choices:
- a) முப்பத்து மூன்று
- b) ஐம்பது
- c) ஐம்பத்தொன்று
- d) ஐம்பத்து மூன்று
Show Answer / விடை
Answer: ஐம்பத்தொன்று
Exam: Group 4 2018
தமிழகத்தில் இன்று காணப்பெறும் குடைவரைக் கோயில்களுள் பழமையானது. எங்குள்ளது?
Choices:
- a) பிள்ளையார்பட்டி
- b) கழுகு மலை
- c) திருப்பரங்குன்றம்
- d) ஆனைமலை
Show Answer / விடை
Answer: பிள்ளையார்பட்டி
Exam: Group 4 2018
தன் இனத்தையும் மொழியையும் பாடாத கவிதை வேரில்லாத மரம்; கூடில்லாத பறவை - என்று பாடியவர் யார்?
Choices:
- a) பாவேந்தர் பாரதிதாசன்
- b) உமர் கய்யாம்
- c) இரசூல் கம்ச தோவ்
- d) க.வைரமுத்து
Show Answer / விடை
Answer: இரசூல் கம்ச தோவ்
Exam: Group 4 2018
'நோய்க்கு மருந்து இலக்கியம்' என்று கூறியவரை தேர்வு செய்க
Choices:
- a) உ. வே. சாமிநாதர்
- b) மகாவித்துவான் மீனாட்சி சுந்தரனார்
- c) பரிதிமாற்கலைஞர்
- d) மறைமலை அடிகளார்
Show Answer / விடை
Answer: மகாவித்துவான் மீனாட்சி சுந்தரனார்
Exam: Group 4 2018
“அளவில்சனம் செலவொழியா வழிக்கரையில் அருளுடையார் உளமனைய தண்ணளித்தாய் உறுவேளில் பரிவகற்றி” - இப்பாடல் வரிகள் இடம்பெற்றுள்ள நூல் யாது?
Choices:
- a) பெரியபுராணம்
- b) திருவிளையாடற்புராணம்
- c) சிலப்பதிகாரம்
- d) சீறாப்புராணம்
Show Answer / விடை
Answer: பெரியபுராணம்
Exam: Group 4 2018
‘அரிசி' என்னும் தமிழ்ச் சொல் ‘ஒரைஸா' என எம்மொழிக்குச் சென்றது?
Choices:
- a) கிரேக்கம்
- b) இலத்தீன்
- c) போர்ச்சுகீசியம்
- d) வடமொழி
Show Answer / விடை
Answer: கிரேக்கம்
Exam: Group 4 2018
பேரறிஞர் அண்ணாவிற்கு விருப்பமான இலக்கியம்
Choices:
- a) கலிங்கத்துப்பரணி
- b) திருக்குறள்
- c) கம்பராமாயணம்
- d) பரிபாடல்
Show Answer / விடை
Answer: கலிங்கத்துப்பரணி
Exam: Group 4 2018
தமிழ் மொழி அழகான சித்திரவேலைப்பாடமைந்த வெள்ளித் தட்டு” என்று கூறியவர்
Choices:
- a) கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை
- b) ஜி.யு.போப்
- c) டாக்டர் கிரௌல்
- d) கால்டுவெல்
Show Answer / விடை
Answer: டாக்டர் கிரௌல்
Exam: Group 4 2018
மன்னிப்பு - எம்மொழிச் சொல்
Choices:
- a) தமிழ்
- b) தெலுங்கு
- c) மலையாளம்
- d) உருது
Show Answer / விடை
Answer: உருது
Exam: Group 4 2018
திருப்பனந்தாளிலும், காசியிலும் தம் பெயரால் மடம் நிறுவி உள்ளவர்
Choices:
- a) இராமலிங்க அடிகளார்
- b) தாயுமானவர்
- c) குமரகுருபரர்
- d) வில்லிபுத்தூரார்
Show Answer / விடை
Answer: குமரகுருபரர்
Exam: Group 4 2018
மயிலேறும் பெருமாளிடம் கல்வி கற்றவர்
Choices:
- a) சுவாமிநாத தேசிகர்
- b) வீரமாமுனிவர்
- c) சி. இலக்குவனார்
- d) மீனாட்சி சுந்தரனார்
Show Answer / விடை
Answer: சுவாமிநாத தேசிகர்
Exam: Group 4 2018
“உடம்பார் அழியின் உயிரார் அழிவர் திடம்பட மெய்ஞ்ஞானம் சேரவும் மாட்டார்” இத் திருமந்திரப்பாடல் இடம் பெற்ற தந்திரம் எது?
Choices:
- a) ஆறாம் தந்திரம்
- b) இரண்டாம் தந்திரம்
- c) மூன்றாம் தந்திரம்
- d) எட்டாம் தந்திரம்
Show Answer / விடை
Answer: மூன்றாம் தந்திரம்
Exam: Group 4 2018
‘அங்கவியல்’ திருக்குறளில் எந்தப் பகுப்பில் இடம்பெற்றுள்ளது?
Choices:
- a) அறத்துப் பால்
- b) பொருட்பால்
- c) காமத்துப் பால்
- d) எதுவுமில்லை
Show Answer / விடை
Answer: பொருட்பால்
Exam: Group 4 2018
ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு எழுமையும் ஏமாப்பு உடைத்து இக்குறளில் ஏமாப்பு என்பதன் பொருள் யாது?
Choices:
- a) பெருமை
- b) ஏமாற்றம்
- c) பாதுகாப்பு
- d) பொறுமை
Show Answer / விடை
Answer: பாதுகாப்பு
Exam: Group 4 2018
“அறவுரைக் கோவை” என அழைக்கப் பெறும் நூல்
Choices:
- a) முதுமொழிக்காஞ்சி
- b) ஆசாரக் கோவை
- c) ஏலாதி
- d) சிறுபஞ்சமூலம்
Show Answer / விடை
Answer: முதுமொழிக்காஞ்சி
Exam: Group 4 2018
இங்கிலாந்து மகாராணி விக்டோரியா காலையில் கண் விழித்ததும் முதலில் படித்த நூல்
Choices:
- a) திருவருட்பா
- b) திருக்குறள்
- c) மகாபாரதம்
- d) இராமாயணம்
Show Answer / விடை
Answer: திருக்குறள்
Exam: Group 4 2018
குடிமக்கள் வரலாறே ஆதி காப்பியமாகத் தமிழ்நாட்டில் அமைந்து விளங்குகிறது. அப்படி அமைவது எந்த நூல்?
Choices:
- a) சீவகசிந்தாமணி
- b) சிலப்பதிகாரம்
- c) மணிமேகலை
- d) கம்பராமாயணம்
Show Answer / விடை
Answer: சிலப்பதிகாரம்
Exam: Group 4 2018
எட்டுத்தொகை நூல்களில் ‘நாடகப் பாங்கில்' அமைந்துள்ள நூலினைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
Choices:
- a) குறுந்தொகை
- b) அகநானூறு
- c) கலித்தொகை
- d) ஐங்குறுநூறு
Show Answer / விடை
Answer: கலித்தொகை
Exam: Group 4 2018
பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒரே ஒரு நூலாசிரியர் மட்டும் இருநூல் படைத்துள்ளார். அவர் யார்?
Choices:
- a) கபிலர்
- b) மூவாதியார்
- c) நல்லாதனார்
- d) கணிமேதாவியார்
Show Answer / விடை
Answer: கணிமேதாவியார்
Exam: Group 4 2018
“என்காற் சிலம்பு மணியுடை அரியே” இவ்வடிகளில் 'மணி' என்பது எதனைக் குறிக்கும் என்பதைத் தெரிவு செய்க.
Choices:
- a) பவளம்
- b) முத்து
- c) மாணிக்கம்
- d) மரக்தம்
Show Answer / விடை
Answer: மாணிக்கம்
Exam: Group 4 2018
“கூடலில் ஆய்ந்த ஒண்தீந் தமிழின்” என்ற வரிகள் இடம் பெற்றுள்ள நூல் எது?
Choices:
- a) திருவாசகம்
- b) மதுரைக் காஞ்சி
- c) பட்டினப்பாலை
- d) தமிழ்விடுதூது
Show Answer / விடை
Answer: திருவாசகம்
Exam: Group 4 2018
தமிழ், வடமொழி அல்லாது மற்றொரு மொழியிலும் குமரகுருபரர் புலமை மிக்கவராக திகழ்ந்தார். அம்மொழி எதுவெனத் தேர்ந்தெடு
Choices:
- a) பாலி
- b) இந்துத்தானி
- c) கன்னடம்
- d) உருது
Show Answer / விடை
Answer: இந்துத்தானி
Exam: Group 4 2018
“பொன்னும் துகிரும் முத்தும் மன்னிய” – இத்தொடரில் உள்ள “துகிர்” என்பதன் பொருளை தேர்ந்தெடுக்க.
Choices:
- a) மாணிக்கம்
- b) மரகதம்
- c) இரத்தினம்
- d) பவளம்
Show Answer / விடை
Answer: பவளம்
Exam: Group 4 2018
“தீம்பிழி எந்திரம் பந்தல் வருந்த” இந்த வரிகள் இடம் பெற்றுள்ள நூல் எது?
Choices:
- a) பெருங்கதை
- b) சீவகசிந்தாமணி
- c) பதிற்றுப்பத்து
- d) பரிபாடல்
Show Answer / விடை
Answer: பதிற்றுப்பத்து
Exam: Group 4 2018
உத்தம சோழப் பல்லவர் என்னும் பட்டம் பெற்றவர்
Choices:
- a) கம்பர்
- b) சேக்கிழார்
- c) புகழேந்தி
- d) ஒட்டக்கூத்தர்
Show Answer / விடை
Answer: சேக்கிழார்
Exam: Group 4 2018
புள்ளுறு புன்கண் தீர்த்தோன்' இவ்வடிகளில் இடம்பெறும் பறவையினை தேர்ந்தெடுக்க.
Choices:
- a) காகம்
- b) கிளி
- c) புறா
- d) ஆந்தை
Show Answer / விடை
Answer: புறா
Exam: Group 4 2018
பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார் இறைவன் அடிசேரா தார் – இக்குறளில் பயின்று வரும் அணியை எழுதுக?
Choices:
- a) உவமையணி
- b) நிர்ல்நிறை அணி
- c) வேற்றுப் பொருள் வைப்பு அணி
- d) ஏகதேச உருவக அணி
Show Answer / விடை
Answer: ஏகதேச உருவக அணி
Exam: Group 4 2018
‘முட்டையிட்டது சேவலா, பெட்டையா'?
Choices:
- a) திணைவழு
- b) விடைவழு
- c) மரபுவழு
- d) வினாவழு
Show Answer / விடை
Answer: வினாவழு
Exam: Group 4 2018
பொருந்தாதச் சொல்லைக் கண்டறிதல் : மாணிக்கம், முத்து, பவளம், கிளிஞ்சல்.
Choices:
- a) மாணிக்கம்
- b) முத்து
- c) பவளம்
- d) கிளிஞ்சல்
Show Answer / விடை
Answer: கிளிஞ்சல்
Exam: Group 4 2018
சொல்லைப் பொருளோடு பொருத்துக :
| சொல் | பொருள் |
|---|---|
| (a) வனப்பு | 1. காடு |
| (b) அடவி | 2. பக்கம் |
| (c) மருங்கு | 3. இனிமை |
| (d) மதுரம் | 4. அழகு |
Choices:
- a) (A) 2 1 4 3
- b) (B) 3 2 1 4
- c) (C) 4 1 2 3
- d) (D) 1 2 3 4
Show Answer / விடை
Answer: (C) 4 1 2 3
Exam: Group 4 2018
பிழையற்ற வாக்கியம் எது?
Choices:
- a) ஓர் மாவட்டத்தில் ஓர் அமைச்சர் அவருடைய மகனோடு சுற்றுலா மேற்க்கொண்டார்
- b) ஒரு மாவட்டத்தில் ஒரு அமைச்சர் அவரது மகனோடு சுற்றுலா மேற்க்கொண்டார்
- c) ஒரு மாவட்டத்தில் ஓர் அமைச்சர் அவருடைய மகனோடு சுற்றுலா மேற்கொண்டார்
- d) ஓர் மாவட்டத்தில் ஒரு அமைச்சர் அவரது மகனோடு சுற்றுலா மேற்க்கொண்டார்
Show Answer / விடை
Answer: ஒரு மாவட்டத்தில் ஓர் அமைச்சர் அவருடைய மகனோடு சுற்றுலா மேற்கொண்டார்
Exam: Group 4 2018
'எழுவாய் செய்யும் வினையைக் கொண்டு முடியும் தொடர்' எவ்வகைத் தொடர் என்று தேர்ந்தெடு.
Choices:
- a) செயப்பாட்டு வினைத் தொடர்
- b) கட்டளைத் தொடர்
- c) அயற்கூற்றுத் தொடர்
- d) செய்வினைத் தொடர்
Show Answer / விடை
Answer: செய்வினைத் தொடர்
Exam: Group 4 2018
பொருத்துக :
| | |
|---|---|
| (a) என்றல் | 1. முற்றும்மை |
| (b) நுந்தை | 2. குறிப்பு வினைமுற்று |
| (c) யாவையும் | 3. மருஉ |
| (d) நன்று | 4. தொழிற்பெயர் |
Choices:
- a) (A) 4 3 1 2
- b) (B) 3 4 2 1
- c) (C) 2 4 1 3
- d) (D) 4 3 2 1
Show Answer / விடை
Answer: (A) 4 3 1 2
Exam: Group 4 2018
உம்மைத்தொகையில் 'உம்' என்னும் இடைச்சொல் எவ்வாறு மறைந்து வரும் என்பதை தேர்ந்தெடு.
Choices:
- a) முதலில் வரும்
- b) இடையில் வரும்
- c) இடையிலும் இறுதியிலும் வரும்
- d) இறுதியில் வரும்
Show Answer / விடை
Answer: இடையிலும் இறுதியிலும் வரும்
Exam: Group 4 2018
ஒரு பெயர்ச்சொல்லின் பொருளைச் செயப்படு பொருளாக வேறுபடுத்துவது எவ்வகை வேற்றுமை எனத் தேர்ந்தெடு
Choices:
- a) மூன்றாம் வேற்றுமை
- b) ஐந்தாம் வேற்றுமை
- c) ஆறாம் வேற்றுமை
- d) இரண்டாம் வேற்றுமை
Show Answer / விடை
Answer: இரண்டாம் வேற்றுமை
Exam: Group 4 2018
பின்வருவனவற்றுள் எது உருவகமன்று?
Choices:
- a) மொழியமுது
- b) அடிமலர்
- c) தமிழ்த்தேன்
- d) கயற்கண்
Show Answer / விடை
Answer: கயற்கண்
Exam: Group 4 2018
‘தானம் தவமிரண்டும் தங்கா வியனுலகம்' இக்குறள்பாவில் இடம்பெற்றுள்ள சீர்மோனை பெயரினைத் தேர்ந்தெடு
Choices:
- a) கீழ்க்கதுவாய் மோனை.
- b) கூழை மோனை
- c) ஒரூஉ மோனை
- d) மேற்கதுவாய் மோனை
Show Answer / விடை
Answer: கூழை மோனை
Exam: Group 4 2018
“உயிர்வரின் உக்குறள் மெய்விட்டு ஓடும்” -என்னும் புணர்ச்சி விதிப்படி புணர்ந்துள்ள சொல் எது?
Choices:
- a) கற்றா
- b) கன்றா
- c) கறா
- d) கன்று
Show Answer / விடை
Answer: கன்றா
Exam: Group 4 2018
“விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து உள்நின்று உடற்றும் பசி” இக்குறட்பாவில் காணலாகும் மோனை எது?
Choices:
- a) மேற்கதுவாய் மோனை
- b) கீழ்க்கதுவாய் மோனை
- c) கூழை மோனை
- d) ஒரூஉ மோனை
Show Answer / விடை
Answer: கூழை மோனை
Exam: Group 4 2018
கீழ்க்கண்ட கூற்றுகளில் எது சரியானது?
Choices:
- a) சால, தவ முதலிய உரிச்சொற்களின் பின் வல்லினம் மிகாது
- b) வினைத்தொகையில் வல்லினம் மிகாது
- c) வன்றொடர்க் குற்றியலுகரத்தின் பின் வல்லினம் மிகாது
- d) உவமைத் தொகையில் வல்லினம் மிகாது
Show Answer / விடை
Answer: வினைத்தொகையில் வல்லினம் மிகாது
Exam: Group 4 2018
தொகை நிலைத் தொடர்களுக்குப் புறத்தே அல்லாத சில மொழிகள் தொக்கி நின்று பொருள் தருவது எது என தேர்ந்தெடு
Choices:
- a) பண்புத்தொகை
- b) அன்மொழித்தொகை
- c) வினைத்தொகை
- d) உவமைத்தொகை
Show Answer / விடை
Answer: அன்மொழித்தொகை
Exam: Group 4 2018
பரிதிமாற்கலைஞருக்கு “திராவிட சாஸ்திரி” என்னும் பட்டத்தை வழங்கியவர்
Choices:
- a) மு.சி.பூர்ணலிங்கம்
- b) சி.வை. தாமோதரனார்
- c) மறைமலையடிகள்
- d) திரு.வி.கலியாண சுந்தரனார்
Show Answer / விடை
Answer: சி.வை. தாமோதரனார்
Exam: Group 4 2018
‘எவ்வகைச் செய்தியும் உவமங்காட்டி' என ஓவியச் சிறப்பைப் பழந்தமிழர் அறிந்திருந்ததைக் காட்டும் இவ்வடி இடம் பெற்ற நூல்
Choices:
- a) குற்றாலக் குறவஞ்சி
- b) முல்லைப் பாட்டு
- c) மதுரைக் காஞ்சி
- d) திருமுருகாற்றுப்படை
Show Answer / விடை
Answer: மதுரைக் காஞ்சி
Exam: Group 4 2018
“தென்னிந்தியாவின் ஏதென்ஸ்' – என அழைக்கப்படும் நகரம்
Choices:
- a) திருநெல்வேலி
- b) தஞ்சை
- c) திருச்சி
- d) மதுரை
Show Answer / விடை
Answer: மதுரை
Exam: Group 4 2018
“உலகினில் நாகரிகம் முற்றும் அழிந்து விட்டாலும் திருக்குறளும் கம்பன் காவியமும் இருந்தால் போதும்; மீண்டும் அதனைப் புதுப்பித்துவிடலாம்” என்று கூறியவர் யார்?
Choices:
- a) ஜி.யு. போப்
- b) கால்டுவெல்
- c) பாரதிதாசன்
- d) பாரதியார்
Show Answer / விடை
Answer: கால்டுவெல்
Exam: Group 4 2018
நாடகம் படைத்தல், நடித்தல், நாடக இலக்கணம் இயற்றல் ஆகிய முக்கோணங்களிலும் நாடகத் தொண்டாற்றியவர் யார்?
Choices:
- a) தவத்திரு சங்கரதாஸ்
- b) பரிதிமாற் கலைஞர்
- c) பம்மல் சம்பந்தனார்
- d) திண்டிவனம் ராமசாமிராஜா
Show Answer / விடை
Answer: பரிதிமாற் கலைஞர்
Exam: Group 4 2018
கீழ்க்கண்டவற்றுள் பறவைகள் சரணாலயம் இல்லாத இடத்தைத் தேர்ந்தெடு
Choices:
- a) கரைவெட்டி
- b) கோவன்புத்தூர்
- c) வெள்ளோடு
- d) சித்திரங்குடி
Show Answer / விடை
Answer: கோவன்புத்தூர்
Exam: Group 4 2018
ஜவஹர்லால் நேரு சிறை வைக்கப்பட்டிருந்த அல்மோரா சிறைச்சாலை எந்த மாநிலத்திலுள்ளது என்பதைத் தெரிவு செய்க
Choices:
- a) மேற்கு வங்காளம்
- b) குஜராத்
- c) உத்தராஞ்சல்
- d) உத்தர பிரதேசம்
Show Answer / விடை
Answer: உத்தராஞ்சல்
Exam: Group 4 2018
கண்ணதாசன் படைத்த நாடகம்
Choices:
- a) மாங்கனி
- b) ஆட்டனத்தி ஆதிமந்தி
- c) கல்லக்குடி மகா காவியம்
- d) இராசதண்டனை
Show Answer / விடை
Answer: இராசதண்டனை
Exam: Group 4 2018
கீழ்க்கண்டவற்றுள் பொருந்தாததைத் தேர்ந்தெடு. அயற்கூற்றில் வருவன
Choices:
- a) மேற்கோள்குறிகள் வராது
- b) தன்மை, முன்னிலைப் பெயர்கள் படர்க்கைப் பெயர்களாக மாறாது
- c) அது, அவை – அங்கே என மாறும்
- d) காலப் பெயர்கள் அந்நாள், மறுநாள் என மாறும்
Show Answer / விடை
Answer: தன்மை, முன்னிலைப் பெயர்கள் படர்க்கைப் பெயர்களாக மாறாது
Exam: Group 4 2018
“புத்தகம் வாசிப்பதனை கடமையாக் ஆக்குதல் கூடாது; கட்டாயப்படுத்தவும் கூடாது. 'அப்படி செய்தால், புத்தகம் வாசிப்பு மகிழ்ச்சியைத் தராது” என்று கூறியவரை தேர்ந்தெடு
Choices:
- a) டாக்டர். மு. வரதராசனார்
- b) பேரறிஞர். அண்ணா
- c) நேரு
- d) காந்தி
Show Answer / விடை
Answer: நேரு
Exam: Group 4 2018
கீழ்க்கண்டவற்றுள் தேவநேயப் பாவாணரின் சிறப்புகளில் பொருந்தாததை தேர்ந்தெடு
Choices:
- a) செந்தமிழ் ஞாயிறு
- b) செந்தமிழ்ச் செல்வர்
- c) இலக்கியச் செம்மல்
- d) தமிழ்ப் பெருங்காவலர்
Show Answer / விடை
Answer: இலக்கியச் செம்மல்
Exam: Group 4 2018
‘உன்னுள் இருக்கும் ஆண்டவனின் அரசு' என்னும் நூலை எழுதியவர் யார்?
Choices:
- a) இபான்
- b) எச். ஏ. கிருட்டிணப்பிள்ளை
- c) தால் சுதாய்
- d) முனைவர் எமினோ
Show Answer / விடை
Answer: தால் சுதாய்
Exam: Group 4 2018
பொருத்துக :
(a) பெருஞ்சித்திரனார் 1. காவியப்பாவை
(b) சுரதா 2. குறிஞ்சித்திட்டு
(c) முடியரசன் 3. கனிச்சாறு
(d) பாரதிதாசன் 4. தேன்மழை
Choices:
- a) (a) (b) (c) (d) 2 3 4 1
- b) 3 4 1 2
- c) 2 4 1 3
- d) 4 3 2 1
Show Answer / விடை
Answer: 3 4 1 2
Exam: Group 4 2018
பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் படைப்புகளுள் இல்லாத ஒன்று எது?
Choices:
- a) கொய்யாக்கனி
- b) கனிச்சாறு
- c) கல்லக்குடி மாகாவியம்
- d) நூறாசிரியம்
Show Answer / விடை
Answer: கல்லக்குடி மாகாவியம்
Exam: Group 4 2018
பெரியாரின் வாழ்க்கை நிகழ்வுகளில் சரியானவற்றைப் பொருத்துக :
(a) யுனெஸ்கோ விருது 1. 21,400
(b) அஞ்சல் தலை 2. 10,700
(c) பங்கேற்ற கூட்டங்கள் 3. 1970
(d) உரையாற்றிய மணிநேரம் 4. 1978
Choices:
- a) (a) (b) (c) (d) 4 3 1 2
- b) 3 4 2 1
- c) 2 3 4 1
- d) 1 3 4 2
Show Answer / விடை
Answer: 3 4 2 1
Exam: Group 4 2018
திருவிளையாடற் புராணத்தில் உள்ள காண்டங்களில் பொருந்தாத காண்டத்தின் பெயரினைத் தேர்ந்தெடு
Choices:
- a) மதுரைக் காண்டம்
- b) கூடற் காண்டம்
- c) வஞ்சிக் காண்டம்
- d) திருவாலவாய்க் காண்டம்
Show Answer / விடை
Answer: வஞ்சிக் காண்டம்
Exam: Group 4 2018
“நரை முடித்துச் சொல்லால் முறை செய்தான்” இத்தொடரில் குறிப்பிடப்படுகின்ற அரசன் யார் என்று தேர்ந்தெடு
Choices:
- a) முதலாம் குலோத்துங்கன்
- b) இராசராசன்
- c) கரிகாலன்
- d) பராந்தகன்
Show Answer / விடை
Answer: கரிகாலன்
Exam: Group 4 2018
‘மணிமேகலை’ - அமுதசுரபியைப் பெற்றிட உதவியவர்
Choices:
- a) மணிமேகலா தெய்வம்
- b) சுதமதி
- c) தீவதிலகை
- d) அறவண அடிகள்
Show Answer / விடை
Answer: தீவதிலகை
Exam: Group 4 2018
“சான்றோர் செல்வம் என்பது சேர்ந்தோர் புன்கண் அஞ்சும் பண்பின் மென்கண் செல்வம் செல்வமென் பதுவே” – இப்பாடல் வரிகளைப் பாடியவர் யார்?
Choices:
- a) முன்றுறை அரையனார்
- b) காரியாசான்
- c) மிளைகிழான் நல்வேட்டனார்
- d) கணிமேதாவியார்
Show Answer / விடை
Answer: மிளைகிழான் நல்வேட்டனார்
Exam: Group 4 2018
தருமிக்கு பொற்கிழி அளித்த படலம் எந்த காண்டத்தில் அமைந்துள்ளது
Choices:
- a) மதுரைக் காண்டம்
- b) சுந்தர காண்டம்
- c) திருவாலவாய்க் காண்டம்
- d) கூடற் காண்டம்
Show Answer / விடை
Answer: திருவாலவாய்க் காண்டம்
Exam: Group 4 2018
‘அஷ்டப்பிரபந்தம்' கீழ்க்கண்டவற்றுள் எதனைக் குறிக்கும்?
Choices:
- a) எட்டு சிற்றிலக்கியங்கள்
- b) எட்டு பெருங்காப்பியங்கள்
- c) ஆறு நூல்கள்
- d) ஒன்பது உரைகள்
Show Answer / விடை
Answer: எட்டு சிற்றிலக்கியங்கள்
Exam: Group 4 2018
காந்திபுராணத்தில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை
Choices:
- a) ஓராயிரத்து முப்பத்து நான்கு
- b) ஈராயிரத்து முப்பத்து நான்கு
- c) மூவாயிரத்து முப்பத்து நான்கு
- d) நான்காயிரத்து முப்பத்து நான்கு
Show Answer / விடை
Answer: ஈராயிரத்து முப்பத்து நான்கு
Exam: Group 4 2018
“நல்லது செய்த லாற்றீ ராயினும் அல்லது செய்த லோம்பு மினது தான்” -என்ற வரிகள் இடம் பெற்ற நூல் எது?
Choices:
- a) அகநானூறு
- b) புறநானூறு
- c) திருக்குறள்
- d) ஐங்குறுநூறு
Show Answer / விடை
Answer: புறநானூறு
Exam: Group 4 2018
மறைமலையடிகளாரின் மகள்
Choices:
- a) கமலாம்பிகை அம்மையார்
- b) கெசவல்லி அம்மையார்
- c) நீலாம்பிகை அம்மையார்
- d) ஞானாம்பிகை அம்மையார்
Show Answer / விடை
Answer: நீலாம்பிகை அம்மையார்
Exam: Group 4 2018
‘உண்பது நாழி உடுப்பவை இரண்டே' – என்ற பாடலடி இடம்பெற்றுள்ள நூல்
Choices:
- a) ஆத்திச்சூடி
- b) நாலடியார்
- c) புறநானூறு
- d) பழமொழி நானூறு
Show Answer / விடை
Answer: புறநானூறு
Exam: Group 4 2018
‘போரை ஒழிமின்' – என்ற கோவூர் கிழாரின் அறிவுரையைக் கேட்டு போரை நிறுத்திய மன்னன் யார்?
Choices:
- a) நெடுங்கிள்ளி
- b) நலங்கிள்ளி
- c) அதியமான்
- d) சேரமான் நெடுமான் அஞ்சி
Show Answer / விடை
Answer: நெடுங்கிள்ளி
Exam: Group 4 2018
பெருவெடிப்புக் கொள்கையின்படி இப்பேரண்டம் விரிவடைந்து நிற்பதைக் கூறும் பாடல் இடம்பெறும் நூல்
Choices:
- a) தேவாரம்
- b) திருவாசகம்
- c) புறநானூறு
- d) பதிற்றுப்பத்து
Show Answer / விடை
Answer: திருவாசகம்
Exam: Group 4 2018
'தேம்பாவணி' என்பது
Choices:
- a) கிறித்தவக் காப்பியம்
- b) இசுலாமியக் காப்பியம்
- c) வைணவக் காப்பியம்
- d) சைவக் காப்பியம்
Show Answer / விடை
Answer: கிறித்தவக் காப்பியம்
Exam: Group 4 2018
“தண்டமிழ் ஆசான்” என்று பாராட்டப் பெற்றவர்.
Choices:
- a) இளங்கோவடிகள்
- b) கம்பர்
- c) திருவள்ளுவர்
- d) சீத்தலைச்சாத்தனார்
Show Answer / விடை
Answer: சீத்தலைச்சாத்தனார்
Exam: Group 4 2018
திருவள்ளுவமாலையில் திருக்குறளைப் புகழ்ந்து பாடியுள்ள புலவர்கள் எத்தனைப் பேர்?
Choices:
- a) ஐம்பத்து மூவர்
- b) எழுபத்தைவர்
- c) அறுபதின்மர்
- d) நூற்றுவர்
Show Answer / விடை
Answer: ஐம்பத்து மூவர்
Exam: Group 4 2018
எனத் தொடங்கும் திருப்பதிகம் பாடிப் பாம்பின் விடத்தை அப்பர் போக்கியருளினார்.
Choices:
- a) உலகெலாம்
- b) ஒன்றுகொலாம்
- c) உலகம் யாவையும்
- d) திருமறையோர்
Show Answer / விடை
Answer: ஒன்றுகொலாம்
Exam: Group 4 2018
பொருத்துக :
நூல் நூலாசிரியர்
(a) களவழி நாற்பது 1. முன்றுறையரையனார்
(b) கைந்நிலை 2. பொய்கையார்
(c) கார் நாற்பது 3. புல்லங்காடனார்
(d) பழமொழி 4. கண்ணங்கூத்தனார்
Choices:
- a) (a) (b) (c) (d) 2 3 4 1
- b) 1 2 3 4
- c) 4 3 1 2
- d) 3 1 2 4
Show Answer / விடை
Answer: 2 3 4 1
Exam: Group 4 2018
‘அறுமோ, நரி நக்கிற்று என்று கடல்'? - இது பயின்று வந்த நூல் எது?
Choices:
- a) பழமொழி
- b) நாலடியார்
- c) திருக்குறள்
- d) ஆசாரக் கோவை
Show Answer / விடை
Answer: பழமொழி
Exam: Group 4 2018
தமிழெண்களைக் கூட்டுக : ருஅ + கூஅ = ?
Choices:
- a) கூஉக
- b) ககூஉ
- c) கருக
- d) கஉகூ
Show Answer / விடை
Answer: கஉகூ
Exam: Group 4 2018
ஆற்றீர் - பகுபத உறுப்பிலக்கணத்தின் படி எவ்வாறு பிரியும்?
Choices:
- a) ஆற்று + ஈர்
- b) ஆறு + ஈர்
- c) ஆ + இற்று + ஈர்
- d) ஆற்று + ஆ + ஈர்
Show Answer / விடை
Answer: ஆற்று + ஆ + ஈர்
Exam: Group 4 2018
தமிழ் ஓசை மொழி.
Choices:
- a) செப்பல்
- b) தூங்கல்
- c) மெல்
- d) துள்ளல்
Show Answer / விடை
Answer: மெல்
Exam: Group 4 2018
“சான்றாண்மை” – அசை பிரித்துக் காட்டுதலில் சரியான விடையைத் தேர்ந்தெடு,
Choices:
- a) சா + ன்றா + ண்மை
- b) சான் + றாண் + மை
- c) சான் + றா + ண்மை
- d) சான் + றாண்மை
Show Answer / விடை
Answer: சான் + றாண் + மை
Exam: Group 4 2018
புறத்திணைகள் எத்தனை வகைப்படும்.
Choices:
- a) பன்னிரெண்டு
- b) ஏழு
- c) ஐந்து
- d) ஒன்பது
Show Answer / விடை
Answer: பன்னிரெண்டு
Exam: Group 4 2018
நான்காம் வேற்றுமை சொல்லுருபுகள் எவை?
Choices:
- a) கொண்டு, உடன்
- b) பொருட்டு, நிமித்தம்
- c) இருந்து, நின்று
- d) உடைய
Show Answer / விடை
Answer: பொருட்டு, நிமித்தம்
Exam: Group 4 2018
பாஞ்சாலி சபதம் இலக்கியத்தில் ‘குளிர்காவுஞ்' இதில் இடம்பெற்றுள்ள ‘கா' என்பதன் பொருளைத் தேர்ந்தெடுக்க:
Choices:
- a) சோலை
- b) பாலைவனம்
- c) வயல்
- d) காடு
Show Answer / விடை
Answer: காடு
Exam: Group 4 2018
“நேர நிகர அன்ன இன்ன என்பவும் பிறவும் உவமத் துருபே” என்ற வரிகள் இடம்பெற்றுள்ள நூல் எது?
Choices:
- a) தொல்காப்பியம்
- b) நன்னூல்
- c) யாப்பருங்கலக் காரிகை
- d) அகத்தியம்
Show Answer / விடை
Answer: நன்னூல்
Exam: Group 4 2018
நாட்டைக் காக்க ஐவர் போர்க்களம் சென்றனர் என்னும் தொடரில் ‘ஐவர்' என்பதன் இலக்கணம் யாது?
Choices:
- a) ஒன்றொழி பொதுச் சொல்
- b) இனங்குறித்தல்
- c) தொடர்மொழி
- d) பொதுமொழி
Show Answer / விடை
Answer: ஒன்றொழி பொதுச் சொல்
Exam: Group 4 2018
“தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே நாவினாற் சுட்ட வடு” - இக்குறட்பாவில் பயின்று வரும் அணி யாது?
Choices:
- a) வேற்றுமையணி
- b) இல்பொருள் உவமையணி
- c) ஏகதேச உருவக அணி
- d) எடுத்துக்காட்டு உவமையணி
Show Answer / விடை
Answer: வேற்றுமையணி
Exam: Group 4 2018
“இழுக்கல் உடையுழி ஊற்றுக்கோல் அற்றே ஒழுக்க முடையார்வாய்ச் சொல்” இக்குறட்பாவில் உள்ள உவமையின் பொருளை தேர்ந்தெடு.
Choices:
- a) நிலம் - வாழ்க்கை
- b) ஊன்றுகோல் - பெரியோர் சொல்
- c) ஊன்றுகோல் - நிலம்
- d) ஒழுக்கம் - வாய்ச்சொல்
Show Answer / விடை
Answer: ஊன்றுகோல் - பெரியோர் சொல்
Exam: Group 4 2018
“பட்டியுள் காளை படிபால் கறக்குமே நல்ல பசு வேளை தவிரா துழும்” இப்பாடல் அடிகளில் இடம்பெற்றுள்ள பொருள்கோள் வகையினை தேர்ந்தெடு.
Choices:
- a) அடிமறிமாற்றுப் பொருள்கோள்
- b) கொண்டு கூட்டுப் பொருள்கோள்
- c) மொழிமாற்றுப் பொருள்கோள்
- d) விற்பூட்டுப் பொருள்கோள்
Show Answer / விடை
Answer: கொண்டு கூட்டுப் பொருள்கோள்
Exam: Group 4 2018
“அண்ணம் நுனிநா வருட” எவ்வெழுத்துகள் தோன்றும்?
Choices:
- a) ரழ வரும்
- b) தந வரும்
- c) றன வரும்
- d) யத் தோன்றும்
Show Answer / விடை
Answer: ரழ வரும்
Exam: Group 4 2018
னல முன்னும் ணள முன்னும் தநக்கள் புணரும் விதிப்படி பின்வருவனவற்றுள் எது சரி?
Choices:
- a) னல முன் டணவும் ணள முன் றனவும்
- b) னல முன் றடவும் ணள முன் னணவும்
- c) னல முன் றனவும் ணளமுன் டணவும்
- d) னல முன் றணவும் ணளமுன் டனவும்
Show Answer / விடை
Answer: னல முன் றனவும் ணளமுன் டணவும்
Exam: Group 4 2018
வித்தொடு சென்ற வட்டி” என்னும் நற்றிணை வரியில் குறிப்பிடப்படும் வட்டி என்பதன் பொருள் என்ன?
Choices:
- a) பனையோலைப் பெட்டி
- b) வயல்
- c) வட்ட வடிவு
- d) எல்லை
Show Answer / விடை
Answer: பனையோலைப் பெட்டி
Exam: Group 4 2018