பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்
சங்க மருவிய காலத்தில் தோன்றிய பதினெட்டு நூல்களைச் சேர்த்து பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் என்று தமிழ் நூல்களில் பெரும் பிரிவு பதினெண் கீழ் கணக்கு நூல்கள் ஆகும். நம் முன்னோர்கள் உருவாக்கிய, மக்கள் வாழ்க்கைக்குத் தேவையான அறங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட நூல்கள் அறநூல்கள் என்று அழைக்கப்படுகின்றன.
தமிழகத்தில் சங்கம் மருவிய காலத்தில் இயற்றப்பட்ட 18 நூல்கள் ஒருங்கே பதினெண் கீழ்க்கணக்குநூல்கள் என அழைக்கப்படுகின்றன. இவை ஒவ்வொன்றும் பல்வேறு புலவர்களால் தனித்தனியான பாடப்பட்டவை.
பதினெண் கீழ்க்கணக்குநூல்கள் யாவை
- நாலடியார்
- நான்மணிக்கடிகை
- இன்னா நாற்பது (நானாற்பதில் ஒன்று)
- இனியவை நாற்பது (நானாற்பதில் ஒன்று)
- கார் நாற்பது (நானாற்பதில் ஒன்று)
- களவழி நாற்பது (நானாற்பதில் ஒன்று)
- ஐந்திணை ஐம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று)
- ஐந்திணை எழுபது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று)
- திணைமொழி ஐம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று)
- திணைமாலை நூற்றைம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று)
- முப்பால் (திருக்குறள்)
- திரிகடுகம்
- ஆசாரக் கோவை
- பழமொழி
- சிறுபஞ்சமூலம்
- கைந்நிலை
- முதுமொழிக் காஞ்சி
- ஏலாதி
3 வகைகள்
- அறநூல்கள் - 11
- அகநூல்கள் - 6
- புறநூல் - 1
அறநூல்கள்
எண் | நூல்கள் | ஆசிரியர்கள் |
---|
1 | நாலடியார் | சமணமுனிவர்கள் |
2 | நான்மணிக்கடிகை | விளம்பிநாகனார் |
3 | இன்னா நாற்பது | கபிலர் |
4 | இனியவை நாற்பது | பூதஞ்சேந்தனார் |
5 | திரிகடுகம் | நல்லாதனார் |
6 | ஆசாரக்கோவை | பெருவாயின்முள்ளியார் |
7 | பழமொழி | முன்றுரை அரையனார் |
8 | சிறுபஞ்சமூலம் | காரியாசன் |
9 | ஏலாதி | கணிமேதாவியர் |
10 | திருக்குறள் | திருவள்ளுவர் |
11 | முதுமொழிக்காஞ்சி | கூடலூர் கிழார் |
அகநூல்கள்
எண் | நூல்கள் | ஆசிரியர்கள் |
---|
1 | ஐந்திணை ஐம்பது | மாறன் பொறையனார் |
2 | ஐந்திணை எழுபது | மூவாதையார் |
3 | திணைமொழி ஐம்பது | கண்ணன் சேந்தனார் |
4 | கார் நாற்பது | கண்ணன் கூத்தனார் |
5 | திணைமாலை நூற்றைம்பது | கணிமேதாவியார் |
6 | ஐந்திணை அறுபது (அ) கைந்நிலை | புல்லங்காடனார் |
புறநூல்
எண் | நூல் | ஆசிரியர் |
---|
1 | களவழி நாற்பது | பொய்கையார் |