நிதிக் குழு, திட்டமிடல் அமைப்புகள் மற்றும் வளர்ச்சி குழு
India's economic governance has evolved from colonial administrative structures to sophisticated planning and financial institutions. This institutional framework builds upon lessons learned from British colonial economic policies while adapting modern economic planning principles for national development and addressing sectoral needs including agriculture and energy development.
Economic Governance Bodies in India
முக்கிய மின்சக்தி திட்டங்கள் மற்றும் கழகங்கள் (Major Power Projects & Corporations)
12வது ஐந்தாண்டு திட்டத்தில் 9 தீவிர மெகா சக்தி திட்டங்களுக்கு (Ultra Mega Power Projects) மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. அவையாவன:
- சாசன் (மத்தியப் பிரதேசம்)
- முந்த்ரா (குஜராத்)
- கிருஷ்ணாம்பட்டினம் (ஆந்திரப் பிரதேசம்)
- தில்லையா (ஜார்கண்ட்)
- சட்டீஸ்கர்
- தமிழ்நாடு
- மகாராஷ்டிரா
மின்சாரநிதி கழகம் (Power Finance Corporation - PFC)
மின்சாரநிதி கழகம் (Power Finance Corporation) அட்டவணை "அ"-ன் கீழ் வரும் மத்திய பொதுத்துறை நிறுவனம் ஆகும். இது ஜூலை 16, 1986-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. வங்கி சாரா நிதியுதவி அளிக்கும் நிறுவனமாகும். இது நவரத்னா அந்தஸ்து பெற்றது. இந்திய மின்சக்தி துறையை மேம்படுத்தும் பொருட்டு நிதி சார்ந்த மற்றும் நிதி சாரா உதவியை இக்கழகம் வழங்குகிறது.
பவர் கிரிட் கழகம் (Power Grid Corporation)
இந்திய அரசு நிறுவனமாக அக்டோபர் 23, 1989 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. 2008 ஆம் ஆண்டு நவரத்னா அந்தஸ்து வழங்கப்பட்டது. பகுதிகள் மற்றும் மாநிலங்களுக்கிடையே மின்சாரத்தை, பாதுகாப்பாகவும், குறைவான செலவிலும், நம்பகத்தன்மை உடையதாகவும் கொண்டு செல்ல பவர் கிரிட் கழகம் தேவையான வழித் தடங்களைக் கட்டமைக்கிறது.
ராஜீவ் காந்தி கிராமின் வித்யூகரன் திட்டம் (Rajiv Gandhi Grameen Vidyutikaran Yojana)
கிராமப் பகுதியில் உள்ள குடியிருப்புகளுக்கு மின் இணைப்பு வழங்கும் திட்டமாகும். இது மார்ச் 2005-ல் தொடங்கப்பட்டது. ஊரக மின்சார கழகம் (நவரத்னா நிறுவனம்) மூலம் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
நிதிக் குழு (Finance Commission)
இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 280வது ஷரத்து நிதிக்குழு பற்றிக் குறிப்பிடுகிறது. நிதிக்குழு பகுதியளவு அதிகாரம் கொண்ட நீதி அமைப்பு போன்று செயல்படுகிறது. குடியரசுத் தலைவரால் ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை அல்லது அவர் தேவைப்படும் நேரத்தில் நிதிக்குழு அமைக்கப்படுகிறது. இது மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு இடையே நிதி உறவுகளை வரையறுக்கவும், சில வருவாய் ஆதாரங்களை ஒதுக்கவும் உருவாக்கப்பட்டது. இது 1951-ல் உருவாக்கப்பட்டது.
அமைப்பு (Composition)
ஒரு தலைவர் மற்றும் நான்கு உறுப்பினர்கள். இவர்கள் அனைவரும் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுகிறார்கள். குடியரசுத் தலைவரால் பரிந்துரைக்கப்படும் காலம் வரையிலும் அவர்கள் பதவியில் இருக்கலாம். மேலும் இவர்கள் மறுமுறை தேர்ந்தெடுக்கப்பட தகுதி உடையவர்களாவர்.
தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கான தகுதிகள் (Qualifications for Chairman and Members)
தலைவர் மற்றும் உறுப்பினர் பொறுப்பிற்கான தகுதிகள் அரசியலமைப்பில் கூறப்படவில்லை. எனினும், தகுதி குறித்து பாராளுமன்றம் சட்டம் மூலம் முடிவு செய்யலாம் என்ற அதிகாரத்தை அரசியலமைப்பு அளித்துள்ளது. அதன்படி கீழ்க்காணும் வரையறைகள் அளிக்கப்பட்டுள்ளன:
- தலைவர்: பொதுவான விஷயங்களில் அனுபவம் உடையவராய் இருத்தல் வேண்டும்.
- உறுப்பினர்கள் (4 பேர்):
- உயர்நீதிமன்ற நீதிபதியாக அல்லது அந்த தகுதி பெற்றவராக இருத்தல் வேண்டும்.
- நிதி மற்றும் அரசாங்க கணக்குகள் தொடர்பானவற்றில் சிறப்பு அறிவு கொண்டிருத்தல் வேண்டும்.
- நிதி விவகாரங்கள் மற்றும் அது தொடர்பான நிர்வாகத்தில் அகன்ற அனுபவம் உடையவராய் இருத்தல் வேண்டும்.
- பொருளாதாரத்தில் சிறந்த அறிவு பெற்றவராய் இருத்தல் வேண்டும்.
பணிகள் (Functions)
கீழ்க்கண்ட விஷயங்களில், குடியரசுத் தலைவருக்கு பரிந்துரைகள் வழங்குவது நிதிக்குழுவின் தலையாய பணியாகும்:
- மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு இடையே வரியினை பகிர்ந்தளித்தல் மற்றும் மாநிலங்களுக்கிடையே வரியினை ஒதுக்குதல்.
- மத்திய அரசால் மாநில அரசிற்கு வழங்கப்படும் மானியங்களுக்கான கொள்கைகளை வகுத்தல்.
- மாநில நிதிக்குழுவின் பரிந்துரையின் பேரில், மாநில தொகுப்பு நிதியிலிருந்து, பஞ்சாயத்து மற்றும் நகராட்சிகளுக்கு தேவையான வளங்களை பகிர்ந்தளிக்க தேவையான நடவடிக்கைகளை எடுத்தல்.
- நிதி தொடர்பாக குடியரசுத் தலைவரால் வினவப்படும் விஷயங்களுக்கு பதிலளித்தல்.
நிதி ஆயோக் வழங்கிய பரிந்துரைகள் ஒரு ஆலோசனைத் தன்மை கொண்டவை, எனவே அரசாங்கத்தின் மீது கட்டுப்படாது. மாநிலங்களுக்கு நிதி வழங்குவது தொடர்பான பரிந்துரைகளை அமல்படுத்துவது அரசின் கடமையாகும்.
அறிக்கை சமர்ப்பித்தல் (Submission of Report)
நிதிக்குழு, தனது செயல்பாடுகள் குறித்த அறிக்கையை குடியரசுத் தலைவரிடம் சமர்ப்பிக்கும். குடியரசுத் தலைவர், அவ்வறிக்கையினை நாடாளுமன்ற இரு அவைகள் முன்பும் சமர்ப்பிப்பார்.
திட்டக் குழு (Planning Commission)
இந்திய அரசாங்கத்தின் ஒரு நிர்வாகத் தீர்மானம் மூலமாக, 1950-ம் ஆண்டு மார்ச் 15-ம் நாள் திட்டக்குழு உருவாக்கப்பட்டது. 1946-ம் ஆண்டு K. C. நியோகி தலைமையில் அமைக்கப்பட்ட திட்ட வாரியத்தின் (Advisory Planning Board) பரிந்துரையின் பேரில் திட்டக்குழு அமைக்கப்பட்டது.
திட்டக்குழு என்பது அரசியலமைப்பு அந்தஸ்து பெறாத (Non-Constitutional) மற்றும் பாராளுமன்ற சட்டம் மூலம் கொண்டு வரப்படாத (Non-Statutory) ஓர் அறிவுரை வழங்கும் அமைப்பாகும்.
திட்டக் குழுவின் பணிகள் (Functions of Planning Commission)
- நாட்டின் வளங்கள், மூலதனம், மற்றும் மனிதவளம் குறித்த மதிப்பீடு செய்து, அவற்றை சரியாக பயன்படுத்த தேவையான வழிமுறைகளை ஆராய்தல்.
- நாட்டின் வளங்களை மிகச் சிறந்த முறையிலும், சரியான அளவிலும் உபயோகப்படுத்தும் வகையில் திட்டத்தினை உருவாக்குதல்.
- திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் முன்னுரிமைகளையும், திட்டத்தின் பல்வேறு நிலைகளையும் தீர்மானித்தல்.
- பொருளாதார வளர்ச்சிக்கு தடை செய்யும் காரணிகளை கண்டறிதல்.
- திட்ட செயல்பாட்டின் போதான வளர்ச்சியினை கண்காணித்தல், மேலும் தேவையான மாறுதல்களை பரிந்துரைத்தல்.
- ஐந்தாண்டு திட்டங்களை வடிவமைப்பதில் முக்கிய பங்காற்றுதல்.
திட்டக் குழுவின் அமைப்பு (Structure of Planning Commission)
- தலைவர்: இந்திய பிரதமர்.
- துணைத் தலைவர்: திட்டக் குழுவின் செயலதிகாரம் கொண்ட தலைவர் (De Facto Head). இவர் மத்திய கேபினட் அமைச்சரவையால் நியமிக்கப்பட்டு, கேபினட் அமைச்சர் அந்தஸ்தை பெறுவார். ஐந்தாண்டுத் திட்டங்களுக்கான வரைவினை தயாரித்து, சமர்ப்பிக்கும் பொறுப்பு இவருடையது.
- பகுதி நேர உறுப்பினர்கள்: நிதி அமைச்சர் மற்றும் திட்ட அமைச்சர் ஆகியோர் கட்டாயம் இடம் பெற்றிருப்பர். சில மத்திய அமைச்சர்களும் பகுதி நேர உறுப்பினர்களாக இருப்பர்.
- முழு நேர உறுப்பினர்கள்: நான்கு முதல் ஏழு நிபுணர்கள் முழு நேர உறுப்பினர்களாய் இருப்பர்.
- செயலாளர்: மூத்த குடிமைப் பணி அதிகாரி (IAS) செயலாளராக நியமிக்கப்படுவார்.
அறிஞர்களின் கருத்து (Opinions of Experts)
- அசோக் சாண்டா: திட்டக்குழு ஒரு "பொருளாதார கேபினட்" (Economic Cabinet).
- நிர்வாக சீர்திருத்தக்குழு: இது ஒரு "சூப்பர் கேபினட்" (Super Cabinet).
- கே. சந்தானம்: திட்டமிடல், நம் நாட்டின் கூட்டாட்சித் தத்துவத்தை பல விஷயங்களில் ஒருமுகத் தன்மை கொண்டதாய் மாற்றி விடுகிறது.
நிதி ஆயோக் (NITI Aayog)
மத்திய அரசு 64 ஆண்டுகளாக செயல்பாட்டில் இருந்து வந்த திட்டக்குழுவிற்குப் பதிலாக நிதி ஆயோக் என்ற புதிய அமைப்பை ஜனவரி 1, 2015 முதல் கொண்டுவந்தது. NITI என்பதன் விரிவாக்கம் National Institution for Transforming India (இந்தியாவை உருமாற்றம் செய்வதற்கான தேசிய நிறுவனம்) ஆகும்.
நோக்கம் (Objectives)
- தேசிய மேம்பாட்டிற்கான முன்னுரிமை அளித்தலில் ஒன்றுபட்ட தொலை நோக்கினை உருவாக்குதல்.
- ஒருங்கிணைந்த கூட்டாட்சித் தத்துவத்தினை (Cooperative Federalism) ஊக்குவித்தல்.
- கிராமப்புறங்கள் வரை அரசாங்கத் திட்டங்கள் சென்றடையும் வகையில் செயல்பாட்டு வழிமுறைகளை வகுத்தல்.
- தொழில்நுட்ப மேம்பாட்டின் மீது அதிக கவனம் செலுத்துதல்.
அமைப்பு (Structure)
- தலைவர்: பிரதமர்.
- ஆட்சி மன்றம் (Governing Council): அனைத்து மாநிலங்களின் முதல்வர்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் துணைநிலை ஆளுநர்கள்.
- பிராந்திய சபை (Regional Council): குறிப்பிட்ட பிராந்திய பிரச்சினைகளைக் கையாள, தொடர்புடைய மாநில முதல்வர்கள் மற்றும் யூனியன் பிரதேச ஆளுநர்களைக் கொண்டது.
- முழுநேர உறுப்பினர்கள்: துணைத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள்.
- பகுதி நேர உறுப்பினர்கள்: முன்னணி பல்கலைக்கழகங்கள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களிலிருந்து இரண்டு உறுப்பினர்கள்.
- செயலகம்: தேவைப்பட்டால் அமைத்துக் கொள்ளலாம்.
முக்கிய செயல்பாடுகள் (Key Functions)
- இந்த அமைப்பு அரசின் ஒரு "சிந்தனைக் களஞ்சியமாக" (Think Tank) செயல்படும்.
- மத்திய மற்றும் மாநில அரசுகள் கொள்கைகளை வடிவமைப்பதற்கு தேவைப்படும் அறிவுசார்ந்த மற்றும் தொழில்நுட்ப அறிவுரைகளை வழங்கும்.
- புதிய கொள்கை முடிவுகளை செயலாக்கத்திற்கு கொண்டு வருவது, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பொருளாதார வர்த்தகத் திட்டங்கள் அமைப்பது இதன் செயல்பாடாகும்.
- சிறந்த ஆட்சி முறைகளை நாடு முழுவதும் செயல்படுத்த வழிவகை செய்தல்.
தேசிய வளர்ச்சிக் குழு (National Development Council - NDC)
தேசிய வளர்ச்சிக் குழுவானது, 1952-ம் ஆண்டு, ஆகஸ்ட் 6-ம் நாள், இந்திய அரசாங்கத்தால் ஒரு நிர்வாக ஆணையின் மூலம் கொண்டு வரப்பட்டது. இதுவும் திட்டக்குழுவைப் போலவே, அரசியலமைப்பு அந்தஸ்து பெறாத மற்றும் சட்டபூர்வமற்ற அமைப்பாகும்.
குறிக்கோள்கள் (Objectives)
- திட்டங்களை செயல்படுத்துவதில், மாநிலங்களின் ஒத்துழைப்பை பெறுதல்.
- திட்டத்திற்கு வலுசேர்க்கும் வகையில் நாட்டின் வளங்களையும், முயற்சிகளையும் ஒன்றுபடுத்துதல்.
- பொதுவான பொருளாதாரக் கொள்கைகளை ஊக்குவித்தல்.
- நாட்டின் அனைத்து பகுதிகளிலும் சமமான, விரைவான வளர்ச்சியை உறுதிப்படுத்துதல்.
அமைப்பு (Composition)
- தலைவர்: பிரதமர்.
- உறுப்பினர்கள்:
- அனைத்து மத்திய கேபினட் அமைச்சர்கள்.
- அனைத்து மாநிலங்களின் முதலமைச்சர்கள்.
- அனைத்து யூனியன் பிரதேசங்களின் நிர்வாகிகள் / முதலமைச்சர்கள்.
- திட்டக்குழு (தற்போது நிதி ஆயோக்) உறுப்பினர்கள்.
- செயலாளர்: திட்டக்குழுவின் செயலாளரே, தேசிய வளர்ச்சிக் குழுவின் செயலாளராகவும் செயல்படுகிறார்.
பணிகள் (Functions)
- தேசிய திட்டத்தை உருவாக்குவதற்கு தேவையான வழிகாட்டல்களை வழங்குதல்.
- திட்டக்குழுவால் உருவாக்கப்படும், தேசிய திட்டத்தை ஆராய்தல்.
- திட்டங்களை செயல்படுத்த தேவையான வளங்கள் குறித்து ஆராய்தல்.
- தேசிய முன்னேற்றத்தைப் பாதிக்கும் சமூக மற்றும் பொருளாதாரக் கொள்கைகளை கருத்தில் கொள்ளுதல்.
- ஐந்தாண்டு திட்டங்களுக்கு இறுதி ஒப்புதல் வழங்குதல்.
திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கும் முறை (Approval Process for Plans)
- உருவாக்கப்பட்ட ஐந்தாண்டு திட்டம் முதலில் மத்திய கேபினட் முன் சமர்ப்பிக்கப்படுகிறது.
- பிறகு தேசிய வளர்ச்சிக் குழுவின் ஒப்புதலுக்கு அனுப்பப்படுகிறது.
- இறுதியாக பாராளுமன்றத்தில் ஒப்புதல் வழங்கப்பட்ட பின், அரசாங்க பட்ஜெட்டில், அதிகாரப் பூர்வமான ஐந்தாண்டு திட்டம் வெளியிடப்படுகிறது.
Related Articles
Economic Development Framework
- Economic Growth, Development, and National Income - Planning and development in context of national income growth
- Agriculture, Land Reforms, and Food Security - Sectoral planning for agricultural development
Historical Context of Economic Planning
- Impact of British Rule in India - Colonial economic policies and their impact on planning systems
- Modern Indian History - British Rule - Economic transformation during colonial period
Related Economic Sectors
- Energy Sector Development - Energy planning and financing through development bodies
- Education and Literacy Schemes - Educational planning and human resource development