அடைமொழியால் குறிக்கப்பெறும் நூல்கள்
- இயற்கை ஓவியம்: பத்துப்பாட்டு
- இயற்கை இன்பக்கலம்: கலித்தொகை
- இயற்கை வாழ்வில்லம்: திருக்குறள்
- இயற்கை இன்ப வாழ்வு நிலையங்கள்: சிலப்பதிகாரம், மணிமேகலை
- இயற்கை தவம்: சீவகசிந்தாமணி
- இயற்கை பரிணாமம்: கம்பராமாயணம்
- இயற்கை அன்பு: பெரிய புராணம்
- இயற்கை இறையருள்: தேவாரம், திருவாசகம், திருவாய்மொழிகள்
- கற்றறிந்தோர் ஏத்தும் தொகை, நூற்றைம்பது கலி: கலித்தொகை
- தமிழ்க் கருவூலம்: புறநானூறு
- வஞ்சி நெடும்பாட்டு: பட்டினப்பாலை
- பரிப்பாட்டு: பரிபாடல்
- கூத்தராற்றுப்படை: மலைபடுகடாம்
- முருகு, புலவராற்றுப்படை: திருமுருகாற்றுப்படை
- நெஞ்சாற்றுப்படை: முல்லைப்பாட்டு
- முப்பால், முப்பானூல், தெய்வ நூல், தமிழ் மறை, பொய்யாமொழி, வாயுரை வாழ்த்து, பொதுமறை, உத்திரவேதம், திருவள்ளுவப் பயன், ஈரடி வெண்பா: திருக்குறள்
- நாலடி நானூறு, வேளாண் வேதம்: நாலடியார்
- அறவுரைக் கோவை: முதுமொழிக் காஞ்சி
- ஐந்திணை அறுபது: கைந்நிலை
- பாவைப்பாட்டு: திருப்பாவை
- திராவிட வேதம்: திருவாய்மொழி
- அறுபத்து மூவர் புராணம், திருத்தொண்டர் புராணம்: பெரிய புராணம்
- திராவிட வேதம், வைணவர்களின் தமிழ் வேதம்: நாலாயிரத் திவ்யப் பிரபந்தம்
- தமிழ் மூவாயிரம்: திருமந்திரம்
- இசைப் பேரிலக்கணம்: கருணாமிர்த சாகரம்
- வாக்குண்டாம்: மூதுரை
- நறுந்தொகை: வெற்றி வேற்கை
- சின்னூல்: நேமிநாதம்
- குட்டித் திருக்குறள்: ஏலாதி
- ஆதியுலா, ஞான உலா: திருக்கயிலாய ஞான உலா
- மூதுரை, முதுமொழி, உலக வசனம், பழமொழி நானூறு: பழமொழி
- வெண்பாப் பாட்டியல்: பன்னிரு பாட்டியல்
- சிவஞான மாபாடியம்: சிவஞான போதம் பேருரை
- குட்டித் தொல்காப்பியம்: இலக்கண விளக்கம்
- குட்டித் திருவாசகம்: திருக்கருவைப் பதிற்றுப் பத்தந்தாதி
- கொங்கு வேளிர் மாக்கதை: பெருங்கதை
- வழிநூல்: கம்பராமாயணம்
- தமிழின் முதல் காப்பியம், முதல் நூல், முத்தமிழ்க் காப்பியம், வரலாற்றுக் காப்பியம், சமுதாயக் காப்பியம், தமிழரின் தேசியக் காப்பியம், குடிமக்கள் காப்பியம், நாடகக் காப்பியம், வழிநூல் என்னும் நூல் வகையுள் முதல் நூல்: சிலப்பதிகாரம்
- மணிமேகலைத் துறவு: மணிமேகலை
- மண நூல்: சீவகசிந்தாமணி
- நீலம், நீலகேசித் தெருட்டு: நீலகேசி
- தென்தமிழ் தெய்வப்பரணி: கலிங்கத்துப்பரணி
- இராசாக் கோவை: திருக்கோவையார்
- குறம், குறவஞ்சி நாடகம், குறவஞ்சி நாட்டியம்: குறவஞ்சி
- உலாப்புறம்: உலா
- தமிழ்மொழியின் உபநிடதம்: தாயுமானவர் பாடல்கள்