Skip to main content

பேச்சு வழக்கு மற்றும் எழுத்து வழக்கு

தமிழ் மொழியில், நாம் அன்றாடம் பேசும்போது பயன்படுத்தும் மொழி நடைக்கும், நூல்களிலும் பிறவற்றிலும் எழுதும்போது பயன்படுத்தும் மொழி நடைக்கும் இடையே வேறுபாடுகள் உள்ளன. இவற்றை முறையே பேச்சு வழக்கு மற்றும் எழுத்து வழக்கு என்று கூறுகிறோம்.

TNPSC Syllabus Wise MCQs 👇Try our Test Hub 👑

பேச்சு வழக்கு

  • நாம் ஒருவருக்கொருவர் பேசும்போது இயல்பாகப் பயன்படுத்தும் சொற்கள், தொடர்கள் ஆகியவை பேச்சு வழக்கு எனப்படும்.
  • இது பெரும்பாலும் எளிமையாகவும், சொற்களைச் சுருக்கியும் ஒலிக்கும்.
  • இடம், சமூகம், தொழில் ஆகியவற்றைப் பொறுத்து பேச்சு மொழி மாறுபடும். இதனை வட்டார வழக்கு என்பர்.

எழுத்து வழக்கு

  • இலக்கண விதிகளுக்கு உட்பட்டு, பிழையின்றி எழுதப்படுவது எழுத்து வழக்கு.
  • இது நூல்கள், இதழ்கள், கடிதங்கள், அரசு ஆவணங்கள் போன்றவற்றில் பயன்படுத்தப்படுகிறது.
  • எழுத்து வழக்கு பெரும்பாலும் அனைவருக்கும் பொதுவானதாகவும், நிலையானதாகவும் இருக்கும்.

பேச்சு வழக்கு - எழுத்து வழக்கு ஒப்பீடு

தேர்வில் கேட்கப்படும் பொதுவான சில சொற்களின் பேச்சு வழக்கு மற்றும் எழுத்து வழக்கு வடிவங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

பேச்சு வழக்குஎழுத்து வழக்குபேச்சு வழக்குஎழுத்து வழக்கு
சாப்டான்சாப்பிட்டான்ஊறவச்சுஊறவைத்து
படிச்சான்படித்தான்தெறந்துதிறந்து
போய்ட்டுபோய்விட்டுஒசந்தஉயர்ந்த
வந்தியா?வந்தாயா?புல்லுபுல்
பாத்தியா?பார்த்தாயா?தலகாணிதலையணை
இந்தாபிடித்துக்கொள்வேர்வைவியர்வை
கெளம்புபுறப்படுவூடுவீடு
தண்ணிதண்ணீர்வெளக்குவிளக்கு
எண்ணைஎண்ணெய்கவுறுகயிறு
ஒருவள்ஒருத்திகத்தாழைகற்றாழை
சுவத்தில்சுவரில்துடங்குதொடங்கு
பதட்டம்பதற்றம்பயந்தாங்குள்ளிபயங்கொள்ளி
சிலவுசெலவுசெவ்வாக்கெழமசெவ்வாய்க்கிழமை
அருகாமையில்அருகில்வாங்கியாந்தான்வாங்கி வந்தான்

தேர்வு நோக்கில் முக்கியத்துவம்

போட்டித் தேர்வுகளில், ஒரு பேச்சு வழக்குச் சொல்லுக்கு இணையான எழுத்து வழக்குச் சொல்லைக் கண்டறிவது போன்ற வினாக்கள் கேட்கப்படுகின்றன. பிழையின்றி எழுதுவதற்கும், ஒரு தொடரின் சரியான பொருளை உணர்வதற்கும் பேச்சு வழக்கு மற்றும் எழுத்து வழக்குக்கு இடையேயான வேறுபாட்டை அறிவது மிக அவசியம்.

❤️ Love our study material?

Help us keep creating quality educational resources for TNPSC aspirants. Your support keeps this platform free for everyone!