Skip to main content

அடைமொழியால் குறிக்கப்பெறும் சான்றோர்கள்

note

இங்கு கொடுக்கப்பட்டுள்ள அடைமொழியால் குறிக்கப்பெறும் சான்றோர்கள், முக்கியமான பொதுத் தமிழ் குறிப்புகளாகும். இது TNPSC போன்ற போட்டித் தேர்வுகளுக்கு மிகவும் பயன்படும்.

  • அகத்தியர்: குறுமுனி
  • இளம்பூரணர்: உரையாசிரியர், உரையாசிரியச்சக்கரவர்த்தி, உரையாசிரியர்களின் தலைமையாசிரியர்
  • நாச்சினார்க்கினியர்: உச்சிமேற்கொள் புலவர், உரைகளில் உரை கண்டவர்
  • கபிலர்: புலனழுக்கற்ற அந்தணாளன், நல்லிசைக் கபிலன், பொய்யா நாவின் கபிலர்
  • திருவள்ளுவர்: முதற்பாவலர், பெருநாவலர், தெய்வப் புலவர், செந்நாப்போதார், நாயனார், மாதானுபங்கி, தேவர், நான்முகனார், பொய்யில் புலவர்
  • திருஞானசம்பந்தர்: தோடுடைய செவியன், காழி வள்ளல், தோணிபுரத் தென்றல், திராவிட சிசு, ஆளுடைய பிள்ளை
  • திருநாவுக்கரசர்: அப்பர், தாண்டக வேந்தர், வாகீசர், மருள் நீக்கியார், தேசம் உய்ய வந்தவர்
  • சுந்தரர்: வன் தொண்டர், தம்பிரான் தோழர், நாவலூரார்
  • மாணிக்கவாசகர்: அழுது அடியடைந்த அன்பர்
  • சேக்கிழார்: அருண்மொழித்தேவர், உத்தமசோழ பல்லவராயன், தெய்வச் சேக்கிழார், தொண்டர் சீர் பரவுவார்
  • பெரியாழ்வார்: பட்டர் பிரான், வேயர்கோன், விஷ்ணுசித்தர்
  • ஆண்டாள்: சூடிக்கொடுத்த நாச்சியார், வைணவம் தந்த செல்வி, கோதை
  • நம்மாழ்வார்: சடகோபன், காரிமாறன், தமிழ்மாறன், பராங்குசன்
  • குலசேகராழ்வார்: கூடலர்கோன், கொல்லிகூவலன்
  • திருமங்கையாழ்வார்: பரகாலன், கலியர், மங்கை வேந்தர், திருமங்கை மன்னர், நாலுகவிப் பெருமாள், வேதம் தமிழ் செய்த மாறன், ஆலிநாடன்
  • திருமழிசையாழ்வார்: திராவிட ஆச்சாரியார்
  • தொண்டரடிப் பொடியாழ்வார்: விப்பிரநாராயணன்
  • நம்பியாண்டார் நம்பி: தமிழ் வியாசர்
  • ஔவையார்: தமிழ் மூதாட்டி
  • திருமூலர்: முதல் சித்தர்
  • கம்பர்: கவிச்சக்கரவர்த்தி, கல்வியில் பெரியவர்
  • சீத்தலைச் சாத்தனார்: தண்டமிழாசான் சாத்தன், நன்னூற் புலவன்
  • திருத்தக்கத் தேவர்: தமிழ்ப் புலவர்களுள் இளவரசர்
  • புகழேந்தி: வெண்பாவிற் புகழேந்தி
  • மீனாட்சி சுந்தரம் பிள்ளை: மகாவித்வான்
  • திரிகூட ராசப்பக் கவிராயர்: திருக்குற்றால நாதர், கோயில் வித்வான்
  • மாயூரம் வேதநாயகம் பிள்ளை: நீதியரசர்
  • பிள்ளைப் பெருமாள் ஐயங்கார்: அழகிய மணவாளதாசர், திவ்வியக்கவி, தெய்வக்கவிஞர்
  • இராமலிங்க அடிகளார்: வள்ளலார், அருட்பிரகாசர், ஓதாது உணர்ந்த பெருமாள், சன்மார்க்கக்கவி, வடலூரார், இறையருள் பெற்ற திருக்குழந்தை
  • பாரதிதாசன்: புரட்சிக் கவிஞர், பாவேந்தர், புதுமைக் கவிஞர்
  • உ.வே. சாமிநாதய்யர்: தமிழ்த்தாத்தா, மகாமகோபாத்தியாய
  • பாரதியார்: மகாகவி, தேசிய கவி, பாட்டுக்கொரு புலவன், சிந்துக்குத் தந்தை, விடுதலைக் கவி, மக்கள் கவி, தமிழிலக்கியத்தின் விடிவெள்ளி, நீடுதுயில் நீக்கப்பாடி வந்த நிலா, எட்டயபுரத்துக் கவி, புதுக்கவிதையின் தந்தை
  • சிவப்பிரகாசர்: கற்பனைக் களஞ்சியம்
  • வெ. ராமலிங்கம் பிள்ளை: நாமக்கல் கவிஞர்
  • பெருஞ்சித்திரனார்: பாவலரேறு
  • அழ. வள்ளியப்பா: குழந்தைக் கவிஞர்
  • திரு.வி. கலியாணசுந்தரனார் (திரு.வி.க.): தமிழ்த்தென்றல்
  • புதுமைப்பித்தன்: சிறுகதை மன்னன்
  • சோமசுந்தர பாரதியார்: நாவலர்
  • இராபர்ட்-டி-நொபிலி: தத்துவ போதகர்
  • வி.கோ. சூரிய நாராயண சாஸ்திரி: பரிதிமாற் கலைஞர்
  • வால்டர் ஸ்காட்: உலகச் சிறுகதையின் தந்தை
  • இராசா. அண்ணாமலைச் செட்டியார்: தனித்தமிழ் இசைக் காவலர்
  • டி.கே.சி.: ரசிகமணி
  • தேவநேயப் பாவாணர்: மொழி ஞாயிறு, செந்தமிழ்ச் செல்வர், செந்தமிழ் ஞாயிறு, தமிழ்ப் பெருங்காவலர் (174 சிறப்புப் பெயர்கள்)
  • உடுமலை நாராயண கவி: பகுத்தறிவுக் கவிராயர்
  • அஞ்சலையம்மாள்: தென்நாட்டின் ஜான்சிராணி
  • அம்புஜத்தம்மாள்: காந்தியடிகளால் தத்தெடுக்கப்பட்ட மகள்
  • கந்தசாமி: நவீன தமிழ்நாடக மறுமலர்ச்சித் தந்தை
  • சங்கரதாசு சுவாமிகள்: நாடகத் தமிழ் உலகின் இமயமலை, தமிழ் நாடகத் தலைமையாசிரியர்
  • வை.மு. கோபாலகிருஷ்ணமாச்சாரியார்: பிற்கால உரையாசிரியர்ச் சக்கரவர்த்தி
  • பரிதிமாற்கலைஞர்: திராவிட சாஸ்திரி, தமிழ் நாடகப் பேராசிரியர்
  • பம்மல் சம்பந்தனார்: தமிழ் நாடகத் தந்தை
  • ஜெயகாந்தன்: தமிழ்நாட்டின் மாப்பசான்
  • வாணிதாசன்: தமிழ்நாட்டின் வேர்ட்ஸ்வொர்த், கவிஞரேறு, பாவலர் மணி
  • அநுத்தமா: தமிழ்நாட்டின் ஜேன் ஆஸ்டின்
  • கி.ஆ.பெ.விஸ்வநாதம்பிள்ளை: முத்தமிழ்க் காவலர்
  • டி.கே. சண்முகம் சகோதரர்கள்: தமிழ்நாடக மறுமலர்ச்சியின் தந்தை
  • இரா.பி. சேதுப்பிள்ளை: சொல்லின் செல்வர்
  • வ.உ. சிதம்பரனார்: கப்பலோட்டிய தமிழன், செக்கிழுத்த செம்மல்
  • ஈ.வெ.ரா. ராமசாமி: பெரியார், பகுத்தறிவுப் பகலவன், சுயமரியாதைச் சுடர், வெண்தாடி வேந்தர்
  • இராஜாஜி: மூதறிஞர்
  • நாமக்கல் கவிஞர் இராமலிங்கனார்: காந்தியக்கவிஞர்
  • காமராஜர்: பெருந்தலைவர், கல்விக் கண் திறந்தவர்
  • அருணகிரிநாதர்: சந்தக்கவி
  • பொ.வே. சோமசுந்தரனார்: பெருமழைப்புலவர்
  • மு. கதிரேசச் செட்டியார்: மகோமகோபாத்தியாய, பண்டிதமணி
  • கருமுத்து தியாகராசச்செட்டியார்: கலைத்தந்தை
  • ஆறுமுக நாவலர்: பதிப்புச் செம்மல்
  • சி.பா. ஆதித்தனார்: தமிழர் தந்தை
  • கா. அப்பாத்துரையார்: பன்மொழிப்புலவர்
  • பட்டுக்கோட்டை கலியாண சுந்தரம்: பொதுவுடைமைக் கவிஞர், மக்கள் கவிஞர்
  • ம.பொ. சிவஞானம்: சிலம்புச் செல்வர்
  • சுந்தர ராமசாமி: பசுவய்யா
  • மாதவய்யர்: கோணக் கோபாலன்
  • வேங்கடரமணி: தென்னாட்டுத் தாகூர்
  • சுரதா: உவமைக் கவிஞர்
  • கண்ணதாசன்: காரைமுத்து புலவர், வணங்காமுடி, பார்வதி, ஆரோக்கியசாமி, கமகப்பிரியன்
  • கல்கி: தமிழ்நாட்டின் வால்டர் ஸ்காட்
  • சுஜாதா: தமிழ்நாட்டின் ஹாட்லி சேஸ்
  • கி.வா. ஜெகநாதன்: தமிழறிஞர்
  • அண்ணாதுரை: பேரறிஞர், தென்னாட்டு பெர்னாட்ஷா
  • வி. முனுசாமி: திருக்குறளார்
  • பாலசுப்ரமணியம்: சிற்பி
  • நா. காமராசன்: வானம்பாடிக் கவிஞர்
  • ஸ்ரீவேணுகோபாலன்: புஷ்பா தங்கதுரை
  • ஆத்மாநாம்: எஸ்.கே. மதுசூதன்
  • என். எஸ். கிருஷ்ணன்: கலைவாணர்
  • எம்.ஜி. ராமச்சந்திரன் (எம்.ஜி.ஆர்): மக்கள் திலகம், புரட்சி நடிகர், இதயக்கனி
  • மு. கருணாநிதி: கலைஞர்
  • எம்.ஆர். ராதா: நடிகவேள்
  • எம்.எஸ். சுப்புலட்சுமி: இசைக்குயில்
  • செய்குத்தம்பி பாவலர்: கற்பனைக் களஞ்சியம்
  • வேதரத்தினம் பிள்ளை: சர்தார்
  • அண்ணாமலை ரெட்டியார்: அண்ணாமலை கவிராஜன்
  • திரு.வி.க.: தமிழ் உரைநடையின் தந்தை
  • வைரமுத்து: கவிப்பேரரசு
  • வா.செ. குழந்தைசாமி: குலோத்துங்கன்
  • அப்துல் ரகுமான்: கவிக்கோ