மக்கள் தொகை, கொள்கைகள் மற்றும் கணக்கெடுப்பு (Population, Policies, and Census)
மக்கள் தொகை வெடிப்பு (Population Explosion)
ஒரு நாட்டில் அல்லது ஒரு பகுதியில் வாழும் ஒட்டு மொத்த மக்களின் எண்ணிக்கை மக்கள் தொகை எனப்படும். அச்சுறுத்தக் கூடிய, அதிவேகமான மக்கள் தொகையின் வளர்ச்சி வீதத்தையே மக்கள் தொகை வெடிப்பு என்கிறோம்.
மக்கள் தொகையை தீர்மானிக்கும் காரணிகள் (Determinants of Population)
- பிறப்பு விகிதம் (Birth Rate): மக்கள் தொகை பெருக்கத்தில் நேரடியான மாறுதலை உண்டுபண்ணும். அதிகப் பிறப்பு வீதம் மக்கள் தொகை பெருக்கத்திற்கு முக்கிய காரணம்.
- இறப்பு விகிதம் (Death Rate): குறைவான இறப்பு வீதம் மக்கள் தொகை பெருக்கத்திற்கு மற்றொரு காரணம்.
- இடப்பெயர்ச்சி (Migration):
- வெளிநாட்டில் குடியேறுதல் (Emigration): வெளிக் குடிப்பெயர்ச்சி மக்கள் தொகை பெருக்கத்தை குறைக்கிறது.
- நம்நாட்டில் குடிபுகுதல் (Immigration): உள் குடிப்பெயர்ச்சி மக்கள் தொகை பெருக்கத்தை அதிகரிக்கிறது.
மக்கள் தொகை வெடிப்பிற்கான காரணங்கள் (Causes for Population Explosion)
-
அதிக பிறப்பு வீதம் (High Birth Rate):
- 1891-1900: 45.8 / 1000
- 2001: 25.8 / 1000
- பிறப்பு வீதம் குறைந்தாலும், மக்கள் தொகை 121 கோடியாக உயர்ந்துள்ளது.
- காரணிகள்: திருமண வயது, சமூக பழக்கங்கள், படிப்பறிவின்மை, பிறப்பு கட்டுப்பாடு முறைகள் பற்றி அறியாமை.
-
குறைவான இறப்பு வீதம் (Low Death Rate):
- மேம்பட்ட சுகாதாரம், தூய்மை, மற்றும் மகப்பேறு பராமரிப்பு வசதிகளால் இறப்பு வீதம் குறைந்துள்ளது.
-
இளம் வயது திருமணம் (Early Marriage):
- இந்தியாவில் ஆண்களின் திருமண வயது 21, பெண்களின் திருமண வயது 18. மற்ற வளர்ந்த நாடுகளில் இது 23 முதல் 25 வரை உள்ளது. இதனால் மகப்பேறு காலம் நீண்டு, பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கிறது.
-
சமுதாய மற்றும் சமய காரணங்கள் (Social and Religious Factors):
- திருமணம் ஒரு இன்றியமையாத சமூகக் கடமையாகக் கருதப்படுகிறது. குடும்பத்திற்கு ஓர் ஆண் குழந்தை என்ற எதிர்பார்ப்பினால் மக்கள் தொகை அதிகரிக்கிறது.
-
வறுமை (Poverty):
- ஏழைக் குடும்பங்களில் குழந்தைகள் கூடுதல் வருமானம் ஈட்டும் நபர்களாகக் கருதப்படுவதால், அதிக குழந்தைகளைப் பெற்றுக்கொள்கின்றனர்.
-
கல்வியறிவின்மை (Illiteracy):
- இந்தியாவில் 26% பேர் கல்வியறிவற்றோர். கல்வியறிவின்மையால், சமூகப் பழக்க வழக்கம், வறுமை, வேலையின்மை போன்ற காரணிகள் அதிகரித்து, மக்கள் தொகையை வளர்ச்சி அடைய செய்கிறது.
பொருளாதார வளர்ச்சி பாதிப்பு (Impact on Economic Growth)
- உணவு பற்றாக்குறை (Food Scarcity): மக்கள் தொகை அதிகரிப்பதால் விவசாய உற்பத்தியில் சமவிகித வளர்ச்சி பாதிக்கப்பட்டு, கடுமையான உணவுப் பற்றாக்குறை ஏற்படுகிறது.
- உற்பத்தி செய்யாத நுகர்வோர் சுமை (Burden of Non-Productive Consumers): குழந்தைகள் மற்றும் முதியோரின் எண்ணிக்கை உயர்கிறது. இவர்கள் உற்பத்தியில் பங்களிக்காமல் நுகர்வோராக மட்டும் இருப்பதால் பொருளாதார சுமை அதிகரிக்கிறது.
- தலா வருமானம் மற்றும் நாட்டு வருமானம் குறைதல் (Decrease in Per Capita and National Income): அதிவேகமாக வளரும் மக்கள் தொகை, நாட்டு வருமானத்தின் அதிகரிப்பை நுகர்ந்துவிடுவதால், தலா வருமானம் மற்றும் நாட்டு வருமானத்தின் வளர்ச்சி தடைபடுகிறது.
- சேமிப்பும் முதலீடும் குறைதல் (Reduction in Savings and Investment): நாட்டு வருமானம் மற்றும் தலா வருமானம் குறைவாக உள்ளதால் சேமிப்பு குறைந்து, முதலீடும் உற்பத்தித் திறனும் பாதிக்கப்படுகிறது.
- வேலையின்மை (Unemployment): வளரும் மக்கள் தொகை வேலை இல்லா திண்டாட்டத்தை மேலும் அதிகரிக்கிறது.
- மகளிரின் உழைப்பு வீணாதல் (Wastage of Women's Labour): அடிக்கடி குழந்தை பெறுவதால், உற்பத்தி நடவடிக்கைகளில் பெருமளவு மகளிரால் நீண்ட காலம் வேலை செய்ய இயலவில்லை.
- உழைப்பின் உற்பத்தி திறன் குறைவு (Low Labour Productivity): மக்களின் வாழ்க்கைத்தரம் குறைவதால் உழைப்பின் உற்பத்தி திறன் குறைகின்றது.
- சமூக நலத் திட்டதின்மீது அதிக செலவு (High Expenditure on Social Welfare): மருத்துவப் பராமரிப்பு, பொது சுகாதாரம், கல்வி, வீட்டு வசதி போன்ற சமூகச் செலவுகளின் தேவை அதிகரிக்கிறது.
- வேளாண்மையின் பின்தங்கிய நிலை (Backwardness in Agriculture): மக்கள் தொகை வளர்ச்சியினால் நிலம் துண்டாக்கப்பட்டு, நவீன உழவு முறையைக் கையாள முடியாத நிலை ஏற்படுகிறது.
- அரசுமீது நிதிச் சுமை (Financial Burden on Government): சமூக நலத்திட்டங்களுக்காகவும், வறுமையை அகற்றுவதற்காகவும், அரசுக்கு அதிக செலவு ஏற்படுகிறது.
மக்கள்தொகை வளர்ச்சியை கட்டுபடுத்தும் வழிகள் (Methods to Control Population Growth)
- தம்பதிகளின் பாதுகாப்பு வீதம் (Couple Protection Rate): குடும்பக் கட்டுப்பாட்டு முறைகளை கையாளும் தம்பதிகளின் விகிதத்தை அதிகரித்தல்.
- குழந்தைகளின் இறப்பு வீதம் (Child Mortality Rate): குழந்தைகள் இறப்பு வீதத்தைக் குறைப்பதன் மூலம், மக்கள் சிறு குடும்ப நெறியினை பின்பற்ற ஊக்கம் ஏற்படும்.
- நாடு தொழில்மையமாதல் (Industrialization): கிராமப்புறங்களில் குடிசை மற்றும் சிறு தொழில்களை வளர்த்து, நிலத்தை சார்ந்திருக்கும் அழுத்தத்தை குறைத்தல்.
- பெண்களின் எழுத்தறிவு மற்றும் கல்வி (Women's Literacy and Education): கல்வி கற்ற பெண்கள் சிறு குடும்பத்தின் நன்மைகளை அறிந்து, குடும்ப அளவைக் குறைக்கின்றனர்.
- காலம் தாழ்த்தி திருமணம் செய்தல் (Delayed Marriage): காலம் தாழ்த்தித் திருமணம் செய்வதை ஊக்குவித்தல் மற்றும் குழந்தை திருமணத்தை தடுத்தல்.
- சட்டரீதியான நடவடிக்கை (Legal Measures): குழந்தைத் திருமணம் மற்றும் பலதார மணம் ஆகியவற்றைத் தடை செய்ய கடும் சட்டங்களை இயற்றி நடைமுறைப்படுத்த வேண்டும்.
மக்கள்தொகை பற்றிய கோட்பாடுகள் (Population Theories)
மால்தசின் மக்கட்தொகை கோட்பாடு (Malthusian Theory)
உணவு உற்பத்தி கூட்டல் வீதத்திலும் (Arithmetic Progression), மக்கட்தொகை பெருக்கல் வீதத்திலும் (Geometric Progression) அதிகரிக்கிறது. உணவுப் பற்றாக்குறையை சரிசெய்ய, இயற்கை மற்றும் செயற்கைத் தடைகள் மூலம் மக்கள் தொகை கட்டுப்படுத்தப்படும்.
- இயற்கைத் தடைகள் (Natural Checks): வறுமை, வியாதிகள், போர்கள், பஞ்சங்கள்.
- செயற்கைத் தடைகள் (Preventive Checks): காலந்தாழ்த்திய திருமணம், வாழ்க்கையில் கட்டுப்பாட்டுடன் இருத்தல்.
உத்தம அளவுக் கோட்பாடு (Optimum Population Theory)
ஒரு நாட்டின் இயற்கை வளங்கள், மூலதனம் மற்றும் தொழில்நுட்ப நிலைக்கு ஏற்றவாறு, தலா உற்பத்தி உச்சத்தில் இருக்கும் மக்கள்தொகை அளவே உத்தம அளவு மக்கள்தொகை ஆகும்.
- குறைந்த மக்கள்தொகை நாடு: உத்தம அளவை விட மக்கள்தொகை குறைவாக இருப்பது.
- அதிக மக்கள்தொகை கொண்ட நாடு: உத்தம அளவை விட மக்கள் தொகை அதிகமாக இருப்பது.
மக்கள்தொகை வளர்ச்சிக் கட்ட கோட்பாடு (Demographic Transition Theory)
இக்கோட்பாடு பிறப்பு வீதத்திற்கும், இறப்பு வீதத்திற்கும் உள்ள உறவை விளக்குகிறது. இதில் 3 நிலைகள் உள்ளன.
- முதல் நிலை: உயர்ந்த பிறப்பு வீதம் மற்றும் உயர்ந்த இறப்பு வீதம். நாடு பின்தங்கிய நிலையில் இருக்கும். மக்கள் தொகை வளர்ச்சி தேக்கமுற்று காணப்படும்.
- ரண்டாம் நிலை: உயர்ந்த பிறப்பு வீதம் மற்றும் குறைந்த இறப்பு வீதம். நாடு முன்னேறும் போது, மருத்துவ வசதிகள் மேம்பட்டு இறப்பு வீதம் குறைகிறது. ஆனால் பிறப்பு வீதம் அதிகமாக இருப்பதால், மக்கள் தொகை வளர்ச்சி வேகமாகிறது.
- மூன்றாம் நிலை: குறைந்த இறப்பு வீதம் மற்றும் குறைந்த பிறப்பு வீதம். பொருளாதார முன்னேற்றம் மற்றும் கல்வியறிவால் மக்கள் சிறு குடும்ப முறைக்கு மாறுவதால், பிறப்பு வீதமும் குறைகிறது. மக்கள்தொகை வளர்ச்சி நிலையாக இருக்கும்.
மக்கள் தொகை கணக்கெடுப்பு (Census of India)
ஒரு குறிப்பிட்ட காலத்தில், ஒரு நாட்டிலுள்ள அனைத்து மக்களின் பொருளாதார, சமூக மற்றும் மரபியல் தொடர்பான புள்ளி விவரங்களைத் திரட்டுவதே மக்கள் தொகைக் கணக்கெடுப்பு ஆகும்.
- முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு: 1872 ஆம் ஆண்டில் மேயோ பிரபு காலத்தில் எடுக்கப்பட்டது.
- முறையான கணக்கெடுப்பு: 1881 ஆம் ஆண்டு முதல், ரிப்பன் பிரபு காலத்தில் முறையான கணக்கெடுப்பு தொடங்கப்பட்டது. பின்னர் பத்து வருடங்களுக்கு ஒரு முறை எடுக்கப்படுகிறது.
- இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு நாள்: பிப்ரவரி 9
- உலக மக்கள் தொகை நாள்: ஜூலை 11
இருபதாம் நூற்றாண்டின் இந்திய மக்கள்தொகை வளர்ச்சி (20th Century Growth Phases)
கணக்கெடுப்பு வருடங்கள் | வளர்ச்சியின் தன்மை |
---|---|
1901-1921 | மக்கள் தொகையின் தேக்கநிலை |
1921-1951 | சீரான வளர்ச்சி |
1951-1981 | விரைவான உயர்வளர்ச்சி |
1981-2011 | குறைவதற்கான அறிகுறி |
1921-ம் ஆண்டு வரை மக்கள்தொகை வளர்ச்சி குறைவாக இருந்தது. அதன்பிறகு மிக வேகமாக அதிகரிக்கத் தொடங்கியதால், 1921-ம் ஆண்டு 'பெரும் பிரிவினை ஆண்டு' என வழங்கப்படுகிறது.
மக்கள்தொகை கணக்கெடுப்பு 2011 (இந்தியா) (Census 2011 - India)
இது 15வது கணக்கெடுப்பு (1881 லிருந்து) மற்றும் சுதந்திரத்திற்குப் பிறகு 7வது கணக்கெடுப்பாகும்.
- குறிக்கோள்: "நமது மக்கள்தொகை கணக்கெடுப்பு நமது எதிர்காலம்"
- மொத்த மக்கள் தொகை: 1,21,01,93,422
- ஆண்கள்: 62,37,24,248
- பெண்கள்: 58,64,69,174
- மக்கள் அடர்த்தி: 382 / ச.கி.மீ
- பாலின விகிதம்: 940 / 1000 ஆண்கள்
- குழந்தை பாலின விகிதம் (0-6 வயது): 914 / 1000
- மொத்த கல்வியறிவு: 74.04%
- ஆண் கல்வியறிவு: 82.14%
- பெண் கல்வியறிவு: 65.46%
மாநிலங்களின் தரவரிசை (2011 Census) - State Rankings
- கல்வியறிவு (Literacy):
- முதல் இடங்கள்: கேரளா (93.91%), லட்சத்தீவு (92.28%)
- கடைசி இடங்கள்: பீகார் (63.82%), அருணாச்சல பிரதேசம் (66.95%)
- மக்கள்தொகை அடர்த்தி (Population Density):
- முதல் இடங்கள்: டெல்லி (11,297/ச.கி.மீ), சண்டிகர் (9,252/ச.கி.மீ)
- கடைசி இடங்கள்: அருணாச்சல பிரதேசம் (17/ச.கி.மீ), அந்தமான் தீவு (46/ச.கி.மீ)
- பாலின விகிதம் (Sex Ratio):
- முதல் இடங்கள்: கேரளா (1084), புதுச்சேரி (1038)
- கடைசி இடங்கள்: டாமன் & டையூ (618), தாத்ரா நாகர் ஹவேலி (775)
மக்கள்தொகை வளர்ச்சிக் கொள்கை (Population Growth Policy)
வளரும் நாடுகளில் மக்கள்தொகைக் கொள்கையை செயல்படுத்திய முதல் நாடு இந்தியா. 1952-ல் நாடு தழுவிய குடும்பநலத் திட்டம் கொண்டுவரப்பட்டது.
தேசிய மக்கள்தொகை கொள்கை (2000) (National Population Policy, 2000)
2000-ம் ஆண்டு பிப்ரவரி மாதம், இந்திய அரசால் தேசிய மக்கள் தொகை கொள்கை வெளியிடப்பட்டது.
- குறுகிய கால நோக்கம்: கருத்தடை சாதனங்கள், சுகாதார கட்டமைப்பு வசதிகள் மற்றும் குழந்தை பராமரிப்பை மேம்படுத்துதல்.
- நீண்டகால நோக்கம்: 2045-ம் ஆண்டிற்குள் மக்கள் தொகையை நிலைப்படுத்துதல்.
- செயல்படுத்துதல்: இதனைச் செயல்படுத்த 'தேசிய மக்கள்தொகைக் குழு' பிரதம மந்திரி தலைமையிலும், மாநிலக் குழு, முதலமைச்சர்கள் தலைமையிலும் தொடங்கப்பட்டு செயல்படுகிறது.
கொள்கையின் முக்கிய இலக்குகள்
- குழந்தைகள் இறப்பு வீதத்தை 1000 பிறப்புகளுக்கு 30க்கு கீழ் கொண்டு வருதல்.
- மகப்பேறு காலத்தில் இறக்கும் தாய்மார்கள் வீதத்தை 1,00,000 பிறப்புகளுக்கு 100-க்கும் கீழ் கொண்டு வருதல்.
- 80% மகப்பேறு முறையான மருத்துவ நிறுவனங்கள் மூலம் நடைபெறச் செய்தல்.
- காலம் தாழ்த்திய திருமணத்தை ஊக்குவித்தல்.
தேசிய மக்கள் தொகை பதிவேடு (National Population Register - NPR)
NPR என்பது இந்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ், இந்தியாவில் குடியிருப்போர் தொடர்பான விவரங்களை பராமரிக்கும் பதிவேடாகும்.
- நோக்கங்கள்:
- அரசின் திட்டங்கள் மற்றும் சலுகைகள் அனைத்து பகுதி மக்களையும் சென்றடையச் செய்வது.
- இந்திய அரசின் திட்டமிடலை மேம்படுத்துவது.
- இந்தியக் குடிமகன்களை மற்றும் இந்தியர் அல்லாதவரையும் கண்டறிவது.
- நாட்டின் பாதுகாப்பை மேம்படுத்துவது.
தமிழ்நாடு - மக்கள்தொகை கணக்கெடுப்பு 2011 (Tamil Nadu - Census 2011)
- மொத்த மக்கள் தொகை: 7,21,38,958
- ஆண்கள்: 3,61,58,871
- பெண்கள்: 3,59,80,087
- மக்கள் அடர்த்தி: 555 / ச.கி.மீ
- பாலின விகிதம்: 995 / 1000 ஆண்கள்
- குழந்தைகள் பாலின விகிதம்: 946 / 1000
- மொத்த கல்வியறிவு: 80.33%
- ஆண்கள் கல்வியறிவு: 86.81%
- பெண்கள் கல்வியறிவு: 73.86%